AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

வியாழன், 6 டிசம்பர், 2012

பாபர் மஸ்ஜித் நிஜங்களும்-போராட்டங்களும்


கி.பி.1526 - முதல் பாணிபட் போர் டெல்லிக்கு அருகே (இன்றைய ஹரியானா மாநிலத்தில்) பாபருக்கும் அப்போது டெல்லியை ஆண்ட இப்ராஹிம் லோடிக்கும் இடையே நடந்தது. லோடி கொல்லப்பட்டு பாபர் வெற்றி பெறுகிறார். இந்தியாவின் வரலாறு மாறுகிறது. பாபர் முகலாயப் பேரரசின் தலைவராக அறியணை ஏறுகிறார்.
கி.பி.1528 - பாபரின் தளபதி மீர்பாகி அயோத்திக்கு வருகிறார். அங்கு முழுமை அடையாமல் கிடந்த பள்ளிவாசலை கட்டி முடித்து அதற்கு பாபரின் பெயரை சூட்டுகிறார். 1524ல் இப்ராஹிம் லோடி டெல்லியை ஆண்டபொழுது இப்பள்ளிவாசலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டிருந்தது.
கி.பி.1853 - முதல் முறையாக பாபர் மஸ்ஜித் நிலம் தொடர்பான சர்ச்சை ஆங்கிலேயர்களால் தூண்டிவிடப்படுகிறது
கி.பி.1855 - பாபர் பள்ளிவாசலின் ஒரு பகுதி நிலம், ராம பக்தர்கள் என கூறிக்கொண்ட ஒரு கூட்டத்தாரால் ஆக்கிரமிக்கப்படுகிறது.

புதன், 5 டிசம்பர், 2012

லால்பேட்டையில் நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த தமுமுகவின் தொடர் முழக்க ஆர்பாட்டம் புவனகிரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.


டிச 6 – தமுமுக தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் புவனகிரி யில் நடைப்பெறும்


பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்ட டிசம்பர் 6ல் பாபர் மஸ்ஜிதை இடித்த குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், பாபர் மஸ்ஜித் தொடர்பான வழக்குகளை உச்ச நீதிமன்றம் விரைந்து முடிக்க வேண்டும் ஆகிய இரட்டைக் கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் கடலூர் மாவட்ட {தெர்கு} சார்பாக  காட்டுமன்னார்குடியில் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டு இருந்தது.
தர்போது 01.12.2012 முதல் 10.12.2012 வரை காட்டுமன்னார்குடி பகுதியில் 144 தடை உத்தரவு பிரப்பிக்கப்பட்டுள்ளது தடையை மீறி காட்டுமன்னார்குடியில் ஆர்ப்பாட்டம் நடத்த கூடாது என்று தலைமை நிர்வாகம் கூரியதால் சிதம்பரம் அருகில் உள்ள புவனகிரி யில்  தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் கடலூர் மாவட்ட {தெர்கு} சார்பாக தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நடைப்பெரும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

செவ்வாய், 4 டிசம்பர், 2012

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் புதிய தேசிய நிர்வாகிகள் தேர்வு


இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவராக இ. அஹமது சாஹிப், பொதுச் செயலாள ராக பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், பொருளா ளராக பி.கே. குஞ்ஞாலி குட்டி ஆகியோரும், துணைத் தலைவர்கள் இருவர், செயலாளர்கள் ஐவர், துணைச் செயலாளர் கள் ஐவரும் கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நடை பெற்ற தேசிய கவுன்சில் கூட்டத்தில் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்ற ஒரே பெயரில் செயல்படுவது என முடிவெடுக்கப் பட்டு கேரள ராஜ்ஜிய முஸ்லிம் லீகின் முழுமையான ஒத்துழைப் போடு சட்டப்பூர்வமாக பணிகள் செய் யப்பட்டன.
இந்தியத் தேர்தல் ஆணை யம் இந்திய யூனியன் முஸ்லிம் லீகை அங்கீகரித்து ‘ஏணி’ சின்னமும் வழங்கியது. இதனை யொட்டி, புதிய சட்டத் திட்ட விதிகளின்படி இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு மாநில நிர்வாகி கள் தேர்தலும் நடத்தப்பட்டன. பத்தாயிரம் உறுப்பினர்க ளுக்கு ஒரு தேசிய கவுன்சில் உறுப்பினர் என்ற வகையில் 398 தேசிய கவுன்சில் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
தேசிய நிர்வாகிள், ஒவ் வொரு மாநிலத்தின் தலைவர், செயலாளர்கள், அந்தந்த மாநிலத்திலிருந்து தேர்வு செய்யப்பட்ட தேசிய கவுன்சில் உறுப்பினர்கள் எண்ணிக் கையில் 10 சதவீதம் மற்றும் தேசியத் தலைவரால் நியமிக் கப்பட்டவர்கள் ஆகியோர் அடங்கிய தேசிய செயற்குழு உறுப்பினர்களும் தேர்வு செய் யப்பட்டனர்.

பிப்ரவரி 8, 9, (வெள்ளி, சனி) தேதிகளில் கோட்டக்குப்பத்தில் தப்லீக் இஸ்திமா


பிப்ரவரி 8, 9, 2013 (வெள்ளி, சனி) தேதிகளில் கோட்டக்குப்பத்தில் இஸ்திமா கடந்த பல வருடங்களாக முயற்சி செய்து இடவசதி இல்லாத காரணத்தால் கோட்டக்குப்பம் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு வந்த நிலையில் இவ்வருடம் கோட்டக்குப்பத்தில் இஸ்திமா நடத்த இறைவன் நாட்டப்படி முடிவு செய்யப்பட்டுள்ளது.
.
கடந்த அக்டோபர் மாதம், பாண்டிச்சேரி மாவட்டத்திற்குட்பட்ட பகுதியில் இஸ்திமா நடத்த இடம் ஆய்வு செய்யப்பட்டது.
.
பல இடங்கள் ஆய்வு செய்யப்பட்டு கோட்டக்குப்பம் புதிய கிழக்கு கடற்கரை சாலை ஒட்டி அமைந்துள்ள பரகத் நகர் மேற்கு பகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டது. கடலூர், விழுப்புரம்,பாண்டிச்சேரி மாவட்டத்திற்கான
இஸ்திமாவை எந்ததெந்தபகுதியில் நடத்துவது என்பதற்கான ஆலோசனை (ஜோடு) கூட்டம் லால்பேட்டை லால்கான் ஜாமிஆ  மஸ்ஜித் வளாகத்தில் 02.12.2012 இன்று  நடைபெற்றது.

திங்கள், 3 டிசம்பர், 2012

காசோலை கையொப்பம் மாறினாலும் குற்றவியல் நடவடிக்கை – உச்சநீதிமன்றம்!


புதுடெல்லி:வங்கியில் அளித்த கையொப்பமும், காசோலைகளில் இடப்படும் கையொப்பமும் மாறுபட்டு இருந்தாலும் அந்த நபர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கலாம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
காசோலை மோசடி தொடர்பான வழக்கில் குஜராத் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், “வங்கிக் கணக்கில் போதுமான பணம் இல்லாத நிலையில் வழங்கப்படும் காசோலை மீதுதான் குற்றவியல் நடவடிக்கை எடுக்க முடியும். வங்கியில் கணக்கு வைத்திருப்பவரின் கையொப்பம் பொருந்தாத காரணத்துக்காக குற்றவியல் நடவடிக்கை எடுக்க முடியாது” என்று தெரிவித்திருந்தது.

ஞாயிறு, 2 டிசம்பர், 2012

லால்பேட்டை புதுப்பள்ளி தெரு சமனன் ஹபீபுல்லா மனைவி மறைவு


லால்பேட்டை புதுப்பள்ளி தெரு சமனன் ஹபீபுல்லா அவர்களின் மனைவியும், நூருல் அமீன் {தமுமுக}  தாயாருமான  காமிலா பீவி அவர்கள் இன்று 02.12.2012 காலை 6.00 மணியளவில்   தாருல் பனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள்
                                                இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன் அன்னாரின்  பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும் உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருள வேண்டும் என.  கொள்ளுமேடுடைம்ஸ் இணையதளம்  பிரார்த்தனை செய்கிறது.

சனி, 1 டிசம்பர், 2012

காட்டுமன்னார்குடி பகுதியில் 144 தடை உத்தரவு


காட்டுமன்னார்குடி பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சில நாட்களுக்கு முன்பு லால்பேட்டை அருகில் உள்ள   ரம்ஜான் தைக்காலில் பள்ளிவாசல் காம்பவுண்ட் சுவரில் அமர்ந்து திங்கள் கிழமை இரவு அமர்ந்து மது அருந்தியுள்ளனர் இதனால் இப்பகுதியில் பதட்டம் நிலவியது இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து மேலும் வன்முறைச் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் அங்கு இன்று முதல் வரும் 10ம் தேதி வரை தடை உத்தரவு அமலில் இருக்கும் என்று கடலூர் சார்பு ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
சம்பவ பகுதியில் 4 பேருக்கு மேல் கூடுவோர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.