AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

வியாழன், 8 நவம்பர், 2012

அல்-அய்னில் இஸ்லாமிய சிறப்பு நிகழ்ச்சி


இஸ்லாமிய சிறப்பு நிகழ்ச்சி
நாள்:09.11.2012 வெள்ளிக்கிழமை
நேரம்:மகரிப் தொழுகையைத் தொடர்ந்து…
இடம்: மஜ்யத் கிளின்கோ கேம்ப் பள்ளிவாசல்
தலைமை: மௌலவி. பஷிர் அஹ்மது பைஜி
(தாயி.தமுமுக.அல்-அய்ன்)
கிராஅத்: மாணவர் A.முஹம்மது அர்ஷத்
த/பெ அ.அஸ்கர்அலி (தாவ்வா பணி நிர்வாகி)
சிறப்புரை: சகோதரர் திருச்சி. அப்துல் ரஹ்மான்
தலைப்பு : “சஹாபாக்களின் தியாகம்”
நன்றியுரை: அம்பகரத்தூர் சகோதரர்.A.ஹபீப் ரஹ்மான் (மஜ்யாத் கிளைச் செயலாளர்)
அனைவரும் வருக! அளவிலா அறிவமுதம் பருக!!
அன்புடன் அழைக்கின்றது:
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் அல்-அய்ன்

Thanks .lalpetexpress

மேட்டுப்பாளையத்தில் காவி பதற்றம்


கோவை மாவட்டம் மேட்டுப்பாலயத்தை சார்ந்த ஆனந்தன் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தாலுகா செயலாளராக இருக்கிறார். கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் அவரை சிலர் தாக்கி இருக்கின்றனர்.
இதை வழக்கம்போல சமூக மோதல்களாக சங்பரிவார் அமைப்புகள் திரித்து பதற்றத்தை உருவாக்கி இருக்கிறார்கள். தனி நபர மோதல்களை வன்முறையாக்க முயன்றுள்ளனர். சுற்று வட்டாரம் முழுக்க கடைகளை அடைத்து பொது மக்களை அச்சுறுத்தி உள்ளனர். மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்துக்குள் நுழைந்து அரசு பேருந்தை தீ வைத்து எரித்துள்ளனர். கோவை, ஊட்டி, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்ற பேருந்துகளை நிறுத்தி பயணிகளை இறக்கி விட்டுள்ளனர். சில இடங்களில் இந்து முன்னணியுடன் பொதுமக்கள் வாக்குவாதத்திலும் ஈடுபட்டுள்ளனர்.

செவ்வாய், 6 நவம்பர், 2012

வாக்காளர் பட்டியலில் திருத்தம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

கடலூர் மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ விடுத்துள்ள செய்திகுறிப்பு:
/
1-1-13ஐ தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் தொடர்பாக கடந்த 1-10-12 அன்று கடலூர் மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதனை தொடர்ந்து கடந்த 1-10-12 முதல் 31-10-12 வரை சிறப்பு சுருக்க முறை பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
தற்பொழுது இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் சென்னை முதன்மை தேர்தல் அலுவலர் ஆகியோரது அறிவுரைகளின்படி எதிர்வரும் 20-11-12 வரை விண்ணப்பங்கள் பெற்றிட கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

மழைக்கால நோய் வராமல் தடுக்க வேண்டுமா? தண்ணீரை காய்ச்சி குடியுங்கள்


தமிழகத்தில் பருவமழை தொடங்கி விட்டது. இந்த சமயத்தில் பெரும்பாலும் குடிநீர் மூலம் பரவும் நோய்கள்தான் அதிகம் தாக்குகிறது. அதற்கு அடுத்து, கொசு மற்றும் பூச்சிகளால் ஏற்படும் நோய். மழைநீரும், சாக்கடை நீரும் கலந்து ஓடும் இடங்களில் நடந்து செல்லும்போதும் வைரஸ் கிருமிகள் பரவி நோய்கள் ஏற்படும்.
சுகாதாரம் இல்லாத குடிநீர் மூலம் காலரா, வாந்தி, பேதி, மஞ்சள்காமாலை ஆகிய நோய்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. இது எல்லா வயதினருக்கும் வரும். மழை நீர் தேங்கிய பகுதியில் உருவாகும் கொசுக்கள் மூலம் மலேரியா, டெங்கு, சிக்குன்குனியா, மூளைக்காய்ச்சல், யானைக்கால் ஆகிய நோய்கள் வரும். மூளைக்காய்ச்சல், டெங்கு நோய் குழந்தைகளை அதிகம் பாதிக்கும்.தெருவில் ஓடும் சாக்கடை நீரால் எலி காய்ச்சல் நோய் ஏற்படும்.தமிழகத்தில் சுகாதாரத்துறை நடத்திய ஆய்வின்படி, மழை காலமான அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் வழக்கத்தைவிட அதிகம் பேர் நோயால் பாதிக்கப்படுகிறார்கள்.

ஞாயிறு, 4 நவம்பர், 2012

‘குறி வைக்கப்படும் முஸ்லிம் சமூகம் – நீதிக்கான முழக்கம்’ – சென்னை மற்றும் மதுரையில் இன்று மாநாடு!


சென்னை: ‘குறிவைக்கப்படும் முஸ்லிம் சமூகம் – நீதிக்கான முழக்கம்’ என்ற தலைப்பில் சென்னை-மதுரை ஆகிய இரு நகரங்களிலும் இன்று  (நவ.4) பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாநாடுகளை நடத்துகிறது. மக்களை சந்திப்போம்! உண்மையை சொல்வோம்! என்ற முழக்கத்துடன் இம்மாநாடுகள் நடைபெறுகின்றன.
சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ள விசாரணை கைதிகளை விடுதலை செய்யக் கோரியும், மக்கள் விரோத கருப்புச் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தியும், நாட்டின் அனைத்து மக்களும் அரசியல் சாசன சட்டம் வழங்கியுள்ள உரிமைகளை அனுபவிக்கவும், சமூகத்தில் கீழ் நிலையில் உள்ள மக்களை சக்திப்படுத்திடவும், இந்த மாநாடுகள் நடத்தப்படுகின்றன.

சனி, 3 நவம்பர், 2012

திருச்சியில் நடைபெற்று வரும் உள்ளாட்சி மன்ற உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம் - படங்கள்



அநியாமாக உடைத்து நொறுக்கப்பட்ட முஸ்லிம் கடைகள்: காவி பயங்கரவாதிகள் அட்டூழியம்


ஹைதராபாத்:ஹைதராபாத்தை அடுத்த தப்பசபூத்தரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சப்ஸி மண்டி பகுதியில், நேற்று மாலை முஸ்லிம்களின் கடைகள் “தீ” வைத்து கொளுத்தப்பட்டன. கடந்த 10 தினங்களாகவே குர்பானிக்கு கொண்டு வரப்படும் மாடுகளை அபகரித்தும், சிறு சிறு சண்டை சச்சரவுகளிலும் ஈடுபட்டு வந்தனர் காவி பயங்கரவாதிகள், பக்ரீத் பெருநாள் முடிந்த பிறகும், கடந்த 28-ம் தேதி அன்று சப்ஸிமண்டி பகுதி யில் உள்ள “தர்கா”வை சேதப்படுத்திய கும்பல் மீது போலீசார் லேசான தடியடி நடத்தினர்,
இதற்கிடையில், போலீஸ் பாதுகாப்பையும் மீறி நேற்று ஒரு கும்பல், முஸ்லிம்களின் கடைகளுக்கு தீ வைத்தது.

வியாழன், 1 நவம்பர், 2012

ஹாஜிகளுக்கு IFF தன்னார்வத் தொண்டர்களின் அபார சேவை!


மக்கா:IFF என்னும் இந்தியா ஃபிராட்டர்னிட்டி ஃபோரம் வருடா வருடம் புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற வரும் ஹாஜிகளுக்கு தன்னலமற்ற தொண்டுகள் பல ஆற்றி வருகின்றது. இந்த வருடமும் அவர்களின் சேவை அபாரமாக இருந்தது. IFF தன்னார்வத் தொண்டர்கள் அரஃபாவிலும், முஸ்தலிபாவிலும், கூடார நகரமான மினாவிலும் பெரு வெள்ளமாகத் திரண்டு சென்ற ஹாஜிகளுக்கு இடைவிடாது சேவைகள் செய்தனர். இது ஹாஜிகளுக்கு மிகுந்த உதவியாகவும், நிவாரணமாகவும் இருந்தது.
குறிப்பாக கூடார நகரமான மினாவில் IFF தன்னார்வத் தொண்டர்களின் சேவை தனித்துவமிக்கதாக இருந்தது.