AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

ஞாயிறு, 29 ஏப்ரல், 2012

சிறுபான்மையினருக்கான நலத்திட்டங்கள் தோல்வி: 4 ஆண்டுகளில் செலவானது 35% மட்டுமே!

புதுடெல்லி, ஏப்ரல் 29 : இந்தியாவில் மிகவும் பின்தங்கியுள்ள சிறுபான்மை சமூகத்தினரின் முன்னேற்றத்திற்காக 11-ஆம் ஐந்து ஆண்டுகள் திட்டத்தில் உட்படுத்திய நலத்திட்டங்கள் வீணானதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 2007-ஆம் ஆண்டு முதல் 2012-ஆம் ஆண்டு வரையிலான திட்ட கால அளவில் சிறுபான்மையினர் நலனுக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் ஒதுக்கப்பட்ட நிதிகளும், நடைமுறைப்படுத்த வேண்டிய திட்டங்களும் பலன் தரும் வகையில் உபயோகப்படுத்தவில்லை என்று இதுக்குறித்து ஆய்வுசெய்த திட்டக்கமிஷன் சிறுபான்மை விவகார ஸ்டியரிங் கமிட்டி உறுப்பினர் கவ்ஹர் ராஸா, ஃபவுண்டேசன் ஃபார் சிவில் லிபர்டீஸ் தலைவர் எம்.ஹிலால், சமூக ஆர்வலர் ஷப்னம் ஹாஷ்மி ஆகியோர் அடங்கிய குழு கூறுகிறது.
11-ஆம் ஐந்தாண்டு திட்டத்தின் கால அளவில் சிறுபான்மை நலனுக்காக 1,400 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. ஆனால், 4 ஆண்டுகள் கழிந்த பொழுது இத்தொகையின் 35 சதவீதம் மட்டுமே(487 கோடி ரூபாய்) செலவழிக்கப்பட்டுள்ளது.
சிறுபான்மை நலனுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து பெருந்தொகை இந்திரா வீடு கட்டும் திட்டம் உள்ளிட்ட இதர பொதுத் திட்டங்களுக்கு மாற்றப்பட்டுள்ளது.
நிதிகளின் பற்றாக்குறை, திட்டங்களை அமலாக்குவதை கண்காணிக்கும் அமைப்பின் வீழ்ச்சி, இதர தொடர் நடவடிக்கைகள் இல்லாமை, அரசு அமைப்புகளில் வேரூன்றிய வகுப்புவாத காரணிகள் ஆகியன சிறுபான்மை திட்டங்கள் தோல்வி அடைய காரணம் என இதுக்குறித்து ஆய்வுச் செய்த குழு கூறுகிறது. ஆனால், அரசின் ஆர்வமின்மை காரணமாக பெரும்பாலான திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று ஆய்வுக்குழு கூறுகிறது.
சிறுபான்மை சமூகங்கள் வசிக்கும், குறிப்பாக முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிகளில் திட்டமிடப்பட்ட நலத்திட்டங்கள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
தேசம் முழுவதும் உள்ள முஸ்லிம்கள் எல்லா துறைகளில் மிகவும் பின் தங்கியுள்ளனர் என்று சச்சார் கமிட்டி கண்டறிந்தது. இதனைத் தொடர்ந்து அரசு ஏராளமான சிறுபான்மையினர் நலத்திட்டங்களை அறிவித்தது. ஆனால், இவை 90 சிறுபான்மையினர் வசிக்கும் மாவட்டங்களுடன் ஒதுங்கியது. அதில் பெரும்பான்மையான திட்டங்களும் நிறைவேற்றப்படவில்லை என ஷப்னம் ஹாஷ்மி கூறுகிறார். இம்மாவட்டங்களில் நிறுவப்பட்ட பள்ளிக்கூடங்கள் முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிகளில் இருந்து 10 அல்லது 20 கிலோமீட்டர் தொலைவில் ஆகும்.
கீழ்மட்டத்தில் இத்திட்டங்கள் குறித்து கண்காணிக்கும் அமைப்பு இல்லாமையும், அரசு கட்டமைப்புகளில் ஊடுருவியுள்ள வகுப்புவாத சக்திகளும் சிறுபான்மை நலத்திட்டங்களுக்கு தடையாக மாறின என்று எஸ்.எம்.ஹிலால் கூறுகிறார்.
போதுமான விகிதம் இல்லை என்று கூறி சிறுபான்மை நலத்திட்டங்களுக்கான நிதியை பல்வேறு மாநிலங்கள் செலவழிக்காமல் திருப்பி அனுப்பியுள்ளன. மாவட்டங்களை தேர்வுச் செய்வதற்கு பதிலாக பஞ்சாயத்து ப்ளாக்குகளுக்கு நிதியை நேரடியாக அளிக்கவேண்டும் என்றும், நகர பகுதிகளை இத்திட்டங்களில் சேர்க்கவேண்டும் என்றும் ஹிலால் கோரிக்கை விடுத்துள்ளார்.
11-வது ஐந்தாண்டு திட்டத்தில் எஸ்.சி பிரிவினருக்கு தனிநபர் விகிதம் 1,228 ரூபாய் ஆகும். எஸ்.டி பிரிவினருக்கு தனி நபர் விகிதம் 1,450 ரூபாய் ஆகும். முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு தனிநபர் விகிதம் ரூ.138 மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை பத்து மடங்கு அதிகரிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறைபாடுகளை சுட்டிக்காட்டி இக்குழுவினர் திட்டக்கமிஷன் உறுப்பினர்களை சந்தித்தனர். இதற்கு தீர்வு காண்பதற்கான வழிகாட்டுதல்கள், ஆலோசனைகள் மற்றும் 12-வது ஐந்தாண்டு திட்டத்தில் சேர்க்கவேண்டிய திட்டங்களின் வழிகாட்டுதல் ஆவணம் ஆகியவற்றை திட்டக் கமிஷனுக்கு இக்குழுவினர் சமர்ப்பித்துள்ளனர்.

தினத்தந்திக்கு தமுமுக மறுப்பு


J. S. ரிபாயி (தலைவர், தமுமுக)
28/04/2012

பெறுநர்:
ஆசிரியர் தினத்தந்தி சென்னை

அன்புடையீர், தங்கள் பணி சிறக்க பிராத்திக்கிறோம்.

எளிய தமிழர்களின் இனிய குரலாக வெளிவரும் தினத்தந்தி குடும்பத்துக்கும், எமக்கும் இடையில் ஆழமான உறவு உண்டு. அய்யா. ஆதித்தனார் காலம் தொட்டே அது பிரிக்க முடியாத பெரும் உறவாக வளர்ந்து வருகிறது. பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களும், தலித் மக்களும், பலகீனமான சிறுபான்மை சமூக மக்களும் தங்களின் தினசரி பொது அறிவை வளர்க்கும் அறிவுக்கண்ணாடியாக தினத்தந்தியை பார்க்கிறார்கள்.
தினத்தந்தியின் சிறப்பே, அது யாரையும் காயப்படுத்தாத அறிவாயுதம் என்பதுதான்.
இந்நிலையில், ஏப்ரல் 28-2012 அன்று தினத்தந்தியில் வெளியான தலையங்கம் எமக்கு அதிர்ச்சியை அளித்தது.
இந்தியாவில் வாழும் 20 கோடி இந்திய முஸ்லிம்களையும், ஏனைய சிறுபான்மையினரையும் காயப்படுத்தும் வகையில் சில வாசகங்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் எழுதப்பட்டுள்ளது வருத்ததிற்குரியது. நமது தினத்தந்தி பத்திரிக்கையிலா இப்படி? என ஒரு கனம் திகைக்க வேண்டி வந்தது.
அது குறித்து சில விளக்கங்களை அளிக்க விரும்புகிறோம்.
இந்திய முஸ்லிம்களில் 99 சதவீதம் பேர் இந்த மண்ணின் புதல்வர்கள். அவர்கள் வேறு தேசங்களிலிருந்து வந்தவர்கள் அல்லர். சமூக நீதியையும், மனித உரிமைகளையும், சமத்துவத்தையும் பெற வேண்டி இஸ்லாத்தை வாழ்வியல் நெறியாக ஏற்றவர்கள். அவர்கள் இந்தியாவில் பெறும் சில சலுகைகள் என்பது அரசியல் சாசனம் வழங்கியுள்ள உரிமையாகும். அரசு வழங்கும் சலுகைகளில் 50 சதவீதம் கூட அவர்கள் முழுமையாக பெற முடியவில்லை என்பதை அரசு புள்ளி விவரமே கூறுகிறது. முஸ்லிம்கள் கல்வி வேலைவாய்ப்புகளில் - இடஒதுக்கீட்டில் கூட தென்னிந்திய மாநிலங்களில் மட்டுமே அனுபவிக்கிறார்கள். அவர்களது வாழ்வு நிலை தலித்துகளின் நிலைகளை விட மோசமாக இருப்பதாக மத்திய அரசு நியமித்த நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா ஆணையத்தின் அறிக்கை தெளிவாக அறிவிக்கிறது.
தங்களுக்கு கிடைக்கும் உரிமைகள், சலுகைகளை விட இம்மண்ணில் வாழும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், புத்தர்கள் உள்ளிட்ட அனைத்து மக்களோடும் அமைதியோடும், நல்லிணக்கத்தோடும் வாழ்வதையே பேரின்பமாக கருதுகிறார்கள்.
இந்நிலையில் பாகிஸ்தானில் வாழும் எமது தொப்புள் கொடி உறவான சிறுபான்மை இந்துக்கள் சந்திக்கும் இன்னல்களை குறித்து அத்தலையங்கம் கவலை தெரிவித்தது நியாயமே. அதை நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம்.
சிறுபான்மை சமூகங்கள் எங்கு, எந்த நாட்டில் பாதிக்கப்பட்டாலும் அவர்களுக்காக குரல் கொடுப்பதே எமது நிலைபாடாகும். இந்தியாவில் முஸ்லிம்கள், இலங்கையில் தமிழர்கள், பாகிஸ்தானில் இந்துக்கள், எகிப்தில் கிறிஸ்தவர்கள் என உலகமெங்கும் வாழும் சிறுபான்மையினர் எமது சொந்தங்கள் ஆவார்கள். அவர்களுக்கு ஏற்படும் துன்பங்கள் துடைக்கப்பட வேண்டும் என்பதே எமது நிலையாகும்.
பாகிஸ்தானில் வாழும் சிறுபான்மையினரின் பாதுகாப்பும், வழிபாட்டு உரிமைகளும், வாழ்வுரிமைகளும் மதிக்கப்பட வேண்டும் என்ற அந்நாட்டின் உச்சநீதிமன்ற கருத்தை நாங்களும் உறுதியாக வழிமொழிகிறோம். அது அவர்களது உரிமைகளாகும்.
ஆனால், அவர்களின் உரிமைக்காக பரிந்து பேசுகிறோம் என்ற பெயரில் இந்தியாவில் உள்ள சிறுபான்மை மக்கள் அரைகுறையாக அனுபவிக்கும் சில சலுகைகளையும், நியாயமான உரிமைகளையும் கோடிட்டு காட்டி தலையங்கம் வரைவது ஆரோக்கியமான ஒன்றா? என்பதை நடுநிலை நாளேடான எமது தினத்தந்தி குடும்பத்தாரின் மனசாட்சிக்கே விட்டு விடுகிறோம்.
பாகிஸ்தான் ஒரு மதச்சார்புள்ள நாடு. ஆனால் இந்தியா ஒரு மதச்சார்பற்ற உயரிய நாடு. இரண்டுக்கும் வித்தியாசம் உண்டு.
1992 டிசம்பர் 6 ஆம் நாளில் இந்தியாவில் பாபர் மசூதி தகர்க்கப்பட்டபோது, அதன் எதிரொலியாக பாகிஸ்தானில் உள்ள மதவெறியர்கள் சிறுபான்மை இந்துக்களின் கோயில்களை சேதப்படுத்தினார்கள்.
ஆனால், பாகிஸ்தான் அரசு இடிக்கப்பட்ட கோயில்களை புனரமைத்து பாஜக தலைவர் அத்வானியை அழைத்து திறந்து வைத்ததை உலகம் அறியும். ஆனால் பாபர் மசூதியை 100 நாட்களில் மீண்டும் கட்டித்தருகிறோம் என்று அன்றைய பிரதமர் நரசிம்மராவ் அறிவித்தது என்னவாயிற்று என்பதும் நமக்கு தெரியும்!
இறுதியாக ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறோம். இந்தியா-பாகிஸ்தான் என்ற இரு நாடுகள் சில சுயநல அரசியல்வாதிகளால் கூறுபோடப்பட்டபோது, பாகிஸ்தானின் கவர்னர் ஜெனரலாக பொறுப்பேற்ற முஹம்மது அலி ஜின்னா, இந்திய முஸ்லிம்களின் தலைவராக திகழ்ந்த காயிதே மில்லத்திடம் “உங்களுக்கு என்ன செய்ய வேண்டும்” என கேட்டபோது, “எங்களுக்கு நீங்கள் எதுவும் செய்ய வேண்டாம். பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு கொடுங்கள், அதுபோதும்” என்றார். இது வரலாற்று ஆதாரம்.
அதுவே எமது நிலையாகும். இதை எமது உறவுக்கார நாளேடான தினத்தந்தி ஆசிரியர் குழுவுக்கும் நினைவூட்டுகிறோம்.
இப்படி ஒரு தலையங்கம் கவனக்குறையாக கூட எழுதப்பட்டிருக்கலாம். ஒரு மருத்துவர் கவனக்குறைவாக அறுவை சிகிச்சை செய்வது எவ்வளவு ஆபத்து என்பதை எப்படி உணர்ந்திருக்க வேண்டுமோ அதே போன்ற பொறுப்பு பத்திரிக்கை சகோதரர்களுக்கும் உண்டல்லவோ? நீங்கள்தானே ஜனநாயகத்தின் விழிகளாகவும், செவிகளாகவும் இருக்கிறீர்கள். அந்த உரிமையால்தான் இதை சுட்டிக்காட்டுகிறோம்.
அதே நேரம் இந்த ஒன்றினால் நமது உறவு பாதிக்காது. பாதிக்கவும் விடக்கூடாது. அப்பொறுப்பு உணர்வு நம் அனைவருக்கும் உண்டு என்பதை ஒருவருக்கொருவர் உரிமையோடு புரிந்து கொள்வோம்.

நன்றி,

தோழமையுடன்,
J.S. ரிபாயி

செவ்வாய், 24 ஏப்ரல், 2012

50 ஆண்டுகால மஸ்ஜித் வேறு இடத்துக்கு மாற்றப்படும்: இலங்கை பிரதமரின் திமிர் அறிக்கை!


கொழும்பு:இலங்கை தம்புள்ளை பகுதியில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக முஸ்லிம்கள் வணக்கங்களில் ஈடுபட்ட மஸ்ஜித் வேறு இடத்துக்கு மாற்றப்படும் என்று அந்நாட்டு பிரதமர் டி.எம்.ஜெயரத்னா திமிராக அறிக்கை வெளியிட்டுள்ளார். இவரது மோசடி அறிக்கைக்கு அரசில் இடம்பெற்றுள்ள முஸ்லிம் அமைச்சர்கள் பகிரங்கமாக எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
60 ஆண்டுகள் பழமையான மஸ்ஜிதை அகற்றும் முயற்சியை நிறுத்தாவிட்டால் சட்டரீதியான பிரச்சனைகள் எழும் என்று நீதித்துறை அமைச்சர் ரவூஃப் ஹக்கீம் கூறியுள்ளார்.
கடந்த வியாழக்கிழமை தம்புள்ளையில் உள்ள மஸ்ஜித் மீது வெடிக்குண்டு வீசப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டது. பின்னர் மறு நாள் வெள்ளிக்கிழமை முஸ்லிம்கள் தொழுகைக்காக சென்றபோது புத்த பிக்குகள்(சாமியார்கள்) அராஜகமாக தடுத்தனர். ‘மஸ்ஜிதை மூடாவிட்டால் இடிப்போம்’ என மிரட்டல் விடுத்தனர்.
தம்புள்ளை பகுதி, புத்தர்களின் புனித இடம் என்று கடந்த 1982-ம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது. புத்தர்களின் புனித இடமாக அறிவிக்கப்பட்ட இடத்தில் பிற மத வழிபாட்டுத் தலங்கள் ஏதும் கட்டப்படக் கூடாது; இங்கு அனுமதியில்லாமல் மஸ்ஜித் கட்டப்பட்டிருக்கிறது என்று புத்த பிக்குகள் திமிர்த்தனமாக கூறிவருகின்றனர்.
ஆனால், மஸ்ஜித்  50 ஆண்டுகளுக்கு முன்பே கட்டப்பட்டதாகவும், அது சட்டப்பூர்வமானது என்றும் முஸ்லிம்கள் தெரிவித்தனர். அப்போது அங்கு வந்த போலீஸார், புத்த பிக்குகளை கலைந்து போகச் சொல்வதற்குப் பதிலாக, மஸ்ஜிதிலிருந்து வெளியேறிவிடுமாறு முஸ்லிம்களிடம் கூறியிருக்கின்றனர். இதன் பிறகு மஸ்ஜித் மூடப்பட்டு, அங்கு போலீஸ் காவல் போடப்பட்டது.
இதையடுத்து, மூத்த அமைச்சர் ஏ.எச்.எம். ஃபவ்ஸி மற்றும் துணை அமைச்சர் ஹிஸ்புல்லா ஆகியோர் தம்புள்ளையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மஸ்ஜிதை திறப்பதற்கு அதிகாரிகள் அனுமதி வழங்கினர்.
இந்நிலையில், மத விவகாரங்களுக்கான அமைச்சரும் பிரதமருமான ஜெயரத்னா, கொழும்பு நகரில் முஸ்லிம் தலைவர்களுடனான கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தார். இந்தக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம பேசிய அவர், மஸ்ஜிதை வேறு இடத்துக்கு மாற்றுவதற்கு முஸ்லிம் தலைவர்கள் ஒப்புக் கொண்டதாகத் தெரிவித்தார்.
ஆனால், பிரதமரின் இந்தக் கருத்தை அமைச்சர் ஃபவ்ஸி மறுத்திருக்கிறார். இந்தக் கூட்டத்தில் தாம் கலந்து கொண்டதாகவும், மஸ்ஜிதை வேறு இடத்துக்கு மாற்றுவதற்கு தாம் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்றும் அவர் கூறியிருக்கிறார். இதை மேற்கு மாகாண ஆளுநர் ஆலவி மெளலானா ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில் தம்புள்ளை நகரில் உள்ள ரஜமஹா விகாரையின் புனிதப் பிரதேசம் என்று பிரகடனப்படுத்தப்பட்ட பகுதியை அபிவிருத்தி செய்வதற்கான திட்டத்தை வரும் 6 மாதங்களுக்குள் நிறைவேற்றி முடிக்க வேண்டுமென்று தம்புள்ளையில் நேற்று(திங்கட்கிழமை) நடந்த கூட்டமொன்றில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாம். இதனால் வரும் 6 மாதங்களுக்குள் புனித பிரதேசம் என்று கூறப்படும் பகுதியிலுள்ள சகல சட்ட விரோதமான கட்டடங்களும் அகற்றப்படும் என்று தீர்மானிக்கப்பட்டதாக ரஜமஹா விகாரையின் தலைமை மதகுரு இனாமலுவே சுமங்கள தேரர் பிபிசியிடம் கூறியுள்ளார்.
தம்புள்ளை பள்ளிவாசலை அகற்றுவது பற்றிய தீர்மானத்தை பள்ளிவாசல் நிர்வாகமும் முஸ்லிம் மத தலைவர்களும் பிரதேச மக்களுமே தீர்மானிக்க வேண்டும் என்கிறார் அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா.

திங்கள், 23 ஏப்ரல், 2012

பத்தாம் வகுப்பு தேர்வு இன்றுடன் முடிந்தது

பத்தாம் வகுப்பு தேர்வு இன்று முடிந்தது. இதனால் கடந்த ஒரு மாதமாக பரபரப்பாக இருந்த மாணவர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். பத்தாம் வகுப்பு தேர்வுகள் கடந்த 4ம் தேதி தொடங்கியது. தமிழகம் மற்றும் புதுவையை சேர்ந்த 6 ஆயிரம் பள்ளிகளை சேர்ந்த 11 லட்சத்து 44 ஆயிரம் மாணவ, மாணவிகள் 10ம் வகுப்பு தேர்வு எழுதினர். சமச்சீர் கல்வி திட்டத்தின் கீழ் நடந்த முதல் தேர்வு என்பதால், கேள்விகள் எப்படி இருக்குமோ என்ற பயத்தில் மாணவர்கள் இருந்தனர். தேர்வுக்காக தமிழகம் முழுவதும் 3,033 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. தேர்வில் கணக்கு பாட தேர்வுதான் மிகவும் கடினமாக இருந்ததாக மாணவ, மாணவிகள் தெரிவித்தனர். ஆங்கில தேர்வின் போது பிட் அடித்த 16 பேர் பிடிப்பட்டனர். திருவண்ணாமலையில் தனியார் பள்ளி தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு ஆசிரியர்களே பிட் வழங்கிய சம்பவம் நடந்தது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய அரசு பள்ளி ஆசிரியர்கள் 7 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இன்று வரலாறு மற்றும் சமூக அறிவியல் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வுடன் 10ம் வகுப்பு தேர்வு முடிந்தது. இதனால் மாணவர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். ஒரு மாத விடுமுறைக்கு பின்னர் ஜூன் 1ம் தேதி பள்ளிகளை மீண்டும் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

காட்டுமன்னார் கோவிலில் திமுக அதிமுக மோதல் : போலிஸ் தடியடி

காட்டுமன்னார் கோவில்:காட்டுமன்னார் கோவிலில் திமுக- அதிமுகவினரிடையே ஏற்பட்ட மோதலைத் தடுக்க போலிஸ் தடியடி நடத்தியது. பேருந்து நிலையம் அருகே இரு கட்சியையும் சேர்ந்த 200க்கும் மேற்ப்பட்டோர் மோதலில் ஈடுபட்டனர். மோதலைத் தடுக்க போலிஸ் தடியடி நடத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.நேற்று நடந்த அதிமுக கூட்டத்தில் திமுக முன்னாள் அமைச்சரை அவதூறாகப் பேசியதாக எழுந்த புகாரினால் பேரூராட்சித் தலைவர் எம்ஜிஆர்தாசன் வீடு தாக்கப்பட்டதில் பொருட்கள் சேதமடைந்தன.  பேரூராட்சித் தலைவர் வீடு தாக்கப்பட்டதால் இந்த மோதல் நிகழ்ந்துள்ளது.

வெள்ளி, 20 ஏப்ரல், 2012

ரூபாய் மதிப்பு தொடர் சரிவு

புதுடெல்லி : சர்வதேச சந்தையில் ரூபாய் மதிப்பு மீண்டும் சரிந்து வருகிறது. அமெரிக்க டாலருக்கு இணையான ரூபாய் மதிப்பு நேற்று ரூ.52 ஆக சரிந்தது. இது கடந்த 14 வாரங்களுக்கு முன்பிருந்த நிலையாகும். கடந்த ஆண்டின் பிற்பாதியில் ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்து வந்தது. டிசம்பர் மாதத்தில் அமெரிக்க டாலருக்கு இணையான ரூபாய் மதிப்பு முன் எப்போதும் இல்லாத வகையில் ரூ.54.30 ஆக சரிந்தது. 

அதன் பிறகு மத்திய அரசு எடுத்த நடவடிக்கை காரணமாக ரூபாய் மதிப்பு படிப்படியாக அதிகரித்து, டாலர் ரூ.50க்கு கீழ் சென்றது. கடந்த சில வாரங்களாக மீண்டும் சரிய தொடங்கியுள்ளது. நேற்று ரூ.52 ஆக சரிந்தது. மேலும் தொடர்ந்து சரிந்தால், இதைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையை ரிசர்வ் வங்கி மேற்கொள்ள வேண்டும் என நிபுணர்கள் கூறியுள்ளனர்.

பெயர் சேர்த்தல், நீக்கம் மட்டும் உண்டு புதுமண தம்பதிகளுக்கு ரேஷன் கார்டு கிடையாது

புதிதாக திருமணம் செய்து கொண்ட தம்பதிக்கு ரேஷன் கார்டு வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.  தமிழகம் முழுவதும் 1.97 கோடி ரேஷன் கார்டு புழக்கத்தில் உள்ளது. போலி ரேஷன் கார்டுகளை ஒழிக்க, தமிழக அரசு பயோமெட்ரிக் தொழில் நுட்பத் துடன் கூடிய புதிய கார்டுகள் வழங்க முடிவு செய்துள்ளது. இதற்காக கார்டுதாரர்களின் கண் கருவிழிப்படலம், விரல் ரேகை பதிவு செய்ய வேண்டும். இதற்கு இப்போதைக்கு போதிய அவகாசம் இல்லை என்பதால், தற்போது புழக்கத்தில் உள்ள ரேஷன் கார்டுகளின் ஆயுள் காலத்தை நடப்பு ஆண்டு முழுவதற்கும் நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

கார்டு புதுப்பிக்கும் பணி கடந்த ஜனவரி முதல் மார்ச் மாதம் முடிய நடந்தது. இந்நிலையில், புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய கார்டு வழங்குவதற்கு ஏதுவாக, இப்போதைக்கு புதுமண தம்பதிகளுக்கு மட்டும் புதிய ரேஷன் கார்டுகளை வழங்க வேண்டாம் என கூட்டுறவு மற்றும் வழங்கல் துறை அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. 
ரேஷன் கார்டு தரமறுக்கும் அரசு உத்தரவால் புதுமண தம்பதிகள் பாஸ்போர்ட் பெறுவது முதல் டிரைவிங் லைசென்ஸ் பெறுவது, புதிய காஸ் இணைப்பு பெறுவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து கூட்டுறவு மற்றும் வழங்கல் துறை அதிகாரிகள் கூறியதாவது: புதுமண தம்பதிகள் புதி தாக ரேஷன் கார்டு பெற வேண்டுமானால், ஏற்கனவே பெற்றோரது ரேஷன் கார்டில் உள்ள தங்கள் பெயர்களை நீக்கம் செய்யப்பட்டதற்கான சான்றிதழ் பெற்று, விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தில் உள்ள விவரங்கள் சரிதானா என்பதை அதிகாரிகள் சரிபார்க்க போதிய அவகாசம் இல்லை. பயோமெட்ரிக் ரேஷன் கார்டுகள் இந்தாண்டு இறுதிக் குள் வழங்குவதற்காக, வீடு வீடாக கார்டுதாரர்களின் விரல் ரேகைகளை பதிவு செய்யும் பணி வரும் மே மாதத்தில் துவங்க உள்ளது. அதனால் புதுமண தம்பதிகளுக்கு புதிய கார்டுகள் வழங்குவதை நிறுத்தி வைக்கும்படியும் வழங்கல் துறை வாய்மொழியாக உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

வியாழன், 19 ஏப்ரல், 2012

அரசியல் கட்சிகளுக்கு அங்கீகாரம் வழங்க நிபந்தனைகள் தேர்தல் கமிஷனின் விதிமுறைகள்


அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு மட்டுமே தேர்தலில் போட்டியிடுவதற்கு நிரந்தர சின்னம் தேர்தல் கமிஷனால் ஒதுக்கப்பட்டு வருகிறது.
சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
அதன்படி, ஒரு கட்சிக்கு தேர்தல் கமிஷனின் அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்றால், அந்த கட்சி சட்டசபை தேர்தலில் 6 சதவீத ஓட்டுகளை பெற்று இருப்பதுடன், குறைந்தபட்சம் 2 தொகுதிகளில் வெற்றி பெற்று இருக்க வேண்டும் என்று, தேர்தல் கமிஷன் நிபந்தனை விதித்து உள்ளது.
தேர்தலில் அரசியல் கட்சிகளுக்கு நிரந்தர சின்னம் ஒதுக்குவதற்காக தேர்தல் கமிஷன் விதித்துள்ள இந்த விதிமுறைகளை எதிர்த்து, கடந்த 2008-ம் ஆண்டில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
தே.மு.தி.க. மனு
தமிழ்நாட்டில் தே.மு.தி.க., விடுதலைச்சிறுத்தைகள், கொங்குநாடு முன்னேற்ற கழகம், மனித நேய மக்கள் கட்சி, மற்றும் அகில இந்திய என்.ஆர்.காங்கிரஸ், நடிகர் சிரஞ்சீவியால் தொடங்கப்பட்ட பிரஜா ராஜ்ஜியம் உள்ளிட்ட 15 கட்சிகள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தன.
தே.மு.தி.க. சார்பில் தாக்கல் செய்யப்பட்டு இருந்த மனுவில், தேர்தலில் தங்கள் கட்சி 8 சதவீத ஓட்டுகள் பெற்று இருந்தபோதிலும், இரு சட்டசபை தொகுதிகளில் வெற்றி பெற முடியாததால் அங்கீகாரம் மறுக்கப்பட்டதாக கூறப்பட்டு இருந்தது.
விதிமுறைகள் செல்லும்
அல்டமாஸ் கபீர், எஸ்.எஸ்.நிஜ்ஜார் மற்றும் செலமேஸ்வர் ஆகிய 3 நீதிபதிகளை கொண்ட `சுப்ரீம் கோர்ட்டு பெஞ்ச்’ இந்த வழக்கை விசாரித்து நேற்று தீர்ப்பு கூறியது. அரசியல் கட்சிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதற்காக தேர்தல் கமிஷன் வகுத்துள்ள விதிமுறைகள் செல்லும் என்று, நீதிபதிகள் அல்டமாஸ் கபீர் மற்றும் நிஜ்ஜார் ஆகிய இரு நீதிபதிகளும் தீர்ப்பு வழங்கி உள்ளனர்.
மற்றொரு நீதிபதியான செலமேஸ்வர், இந்த தீர்ப்பை ஏற்காததுடன் அதற்கு எதிரான கருத்தை தெரிவித்து இருக்கிறார். இருந்தபோதிலும் பெரும்பான்மை நீதிபதிகளின் கருத்தின் அடிப்படையில், தேர்தல் கமிஷனின் விதிமுறைகள் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பிரச்சினை குறித்து தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன.
நியாயமான விதிமுறைதான்
“அங்கீகாரத்தை பெறுவதற்காக ஒரு கட்சி தனது தகுதியை நிரூபித்தாக வேண்டும் என்ற அடிப்படையில் தேர்தல் கமிஷன் ஒரு அளவீட்டை நிர்ணயித்து உள்ளது. இது நியாயமான பொருத்தமான விதிமுறைதான். இதன்மூலம் அங்கீகாரம் பெற்ற கட்சியால் நிரந்தர சின்னம் உள்ளிட்ட அனைத்து பயன்களையும் பெற முடியும்” என்று பெரும்பான்மை தீர்ப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
அதே நேரத்தில், மாறுபட்ட தீர்ப்பை வழங்கிய நீதிபதி செலமேஸ்வர், மற்ற இருவரின் கருத்தை ஏற்கவில்லை. “அங்கீகரிக்கப்பட்ட, அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளுக்கான விளக்கத்தில் விவேகமான தொடர்பு இல்லை” என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
நம்பரை வைத்து தீர்மானிப்பதா?
“ஒரு ஜனநாயக அமைப்பில் பெரும்பான்மையினர் ஆட்சியில் சிறுபான்மையோரின் உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை சொல்ல இந்த கோர்ட்டு தவறிவிட்டது என்பதே எனது கருத்து என்றும், அவர் விளக்கம் அளித்து இருக்கிறார்.
“நம்பரை மட்டும் அடிப்படையாக வைத்து ஜனநாயகத்தை தீர்மானிப்பதாக இருந்தால், உலகின் மிகப் பெரிய ஜனநாயகவாதியாக ஹிட்லர் இருந்து இருப்பார்” என்றும் நீதிபதி செலமேஸ்வர், தனது தீர்ப்பில் குறிப்பிட்டு இருக்கிறார்.

குண்டுவெடிப்பு வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட ஜியாவுர் ரஹ்மான் குறைந்த வாக்குகளில் தோல்வி!


புதுடெல்லி:டெல்லி மற்றும் அஹ்மதாபாத் குண்டுவெடிப்பு வழக்குகளில் அநியாயமாக குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஜியாவுர் ரஹ்மான் டெல்லி மாநகராட்சி வார்டு தேர்தலில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியுள்ளார்.
தெற்கு டெல்லி மாநகராட்சியில் அமைந்துள்ள ஸாக்கிர் நகர் வார்டில் ஜியாவுர் ரஹ்மான் சுயேட்சையாக போட்டியிட்டார். இவரை எதிர்த்து முக்கியமாக காங். கட்சி சார்பில் சோயப் டேனிஸ் போட்டியிட்டார். நேற்று வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த வேளையில் சோயப், ஜியாவுர் ரஹ்மானை வெறும் 517 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார். சோயப் டேனிஸ் 8194 வாக்குகளையும், ஜியாவுர் ரஹ்மான் 7677 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
டெல்லி மற்றும் அஹ்மதாபாத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்புகள் தொடர்பாக 2008-ஆம் ஆண்டு நடந்த பாட்லா ஹவுஸ் போலி என்கவுண்டருக்கு பிறகு ஜியாவுர் ரஹ்மான் கைது செய்யப்பட்டார். இவர் தற்பொழுது சபர்மதி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஜியாவுர் ரஹ்மானுக்காக அவரது தந்தை அப்துர் ரஹ்மான் மற்றும் உறவினர்கள் பிரச்சாரம் மேற்கொண்டனர்.
தேர்தல் முடிவு குறித்து ஜியாவுர் ரஹ்மானின் தந்தை அப்துர் ரஹ்மான் கூறுகையில், “இப்பகுதிகளில் நாங்கள் செல்லும் போது யாரும் எங்களிடம் வருவதில்லை. தற்பொழுது பெரும்பாலான மக்கள் அதிலும் குறிப்பாக இளைஞர்கள் எங்களுடன் உள்ளார்கள். அவர்களுக்கு பயமோ, சுயநலனோ இல்லை. பொதுவாகவே குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சமுதாயம் அங்கீகாரம் அளிப்பதில்லை. இத்தேர்தல் நீதிக்கான ஒரு காலடிச் சுவடாகும். இதன் மூலம் பெரும்பாலான மக்களை தொடர்புகொள்ள முடிந்துள்ளது.” என்றார்.
உள்ளூர் சமுதாய தலைவர் முஷாரஃப் ஹுஸைன் கூறுகையில், “ஜியாவுர் ரஹ்மான் தேர்தலில் தோல்வியை தழுவியிருந்தாலும் அவர் முத்திரை பதித்துள்ளார். அவர் பெற்ற வாக்குகள் மூலம் மக்கள் அவர் நிரபராதி என்பதை நம்பியுள்ளனர். மேலும் அவருக்கு பெரும்பாலான மக்களின் ஆதரவும் உள்ளது.” என்றார்.
வெற்றிப்பெற்ற காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த முஸ்லிம் வேட்பாளர் சோயப் டேனிஸ் கூறுகையில், “எனக்கு ஜியாவுர் ரஹ்மான் மீது அனுதாபம் உண்டு. மேலும் அவர் ஒரு நிரபராதி என்பதையும் நான் நம்புகிறேன். ஆனால், இப்பிரச்சனைக்கு இத்தேர்தல் தீர்வு ஆகாது” என தெரிவித்துள்ளார்.

செவ்வாய், 17 ஏப்ரல், 2012

வெள்ளரிக்காய் மருத்துவம்

வெள்ளரியில் மிகுந்துள்ள நீர்ச்சத்து, கடும் நாவறட்சியை விரட்டுவதோடு, பசியையும் உண்டாக்கும். உடலைக் குளிரவைக்கும்.வெள்ளரியில் வைட்டமின்கள் ஏதுமில்லை. ஆனால், தாதுப்பொருட்களான சோடியம், கால்சியம், மக்னேசியம், இரும்பு, பாஸ்பரஸ், கந்தகம், சிலிகன், குளோரின், இத்தனையு வெள்ளரியில் உண்டு. 
இவற்றைவிட, நம் இத்தத்தில் சிவப்பணுக்களை உருவாக்கும் பொட்டாசியம் வெள்ளரியில் மிகுதி. ஈரல், கல்லீரல் இவற்றில் சூட்டைத் தணிக்கும் ஆற்றல் வெள்ளரிக்கு இருப்பதால் அப்பாகங்களில் ஏற்படும் நோய் தணியும். செரிமானம் தீவிரமாகும். பசி அதிகரிக்கும். வெள்ளரிக்காயை உண்ணுகையில் பசிரசம் என்னும் விசேஷ ஜீரண நீர் சுரக்கிறது என்பதும் விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு. 
மலத்தைக் கட்டுப்படுத்தும் பித்தத்தைக் குறைக்கும். உள்ளரிப்பு, கரப்பான் போன்ற சரும நோய்களைப் போக்கும் ஆற்றல் வெள்ளரிக்கு உண்டு. வெள்ளரிப் பிஞ்சை உட்கொண்டால் திரிதோஷமும் போகும் என்று பழைய வைத்திய நூல்கள்பேசுகின்றன.புகைப் பிடிப்போரின் குடலை நிகோடின் நஞ்சு சீரழிக்கிறது. 
நஞ்சை நீக்கும் அற்புக ஆற்றல் வெள்ளரிக்காய்க்கு உண்டு. மூளைக்கு மிகச்சிறந்த வலிமை தரக்கூடியது வெள்ளரி. மூளை வேலை அதிகம் செய்து கபாலம் சூடு அடைந்தவர்களுக்குக் குளிர்ச்சியும், மூளைக்குப் புத்துணர்ச்சியும் வெள்ளரிக்காய் வழங்கும்.நுரையீரல் கோளாறுகள், கபம் & இருமல் உள்ளவர்கள் வெள்ளரிக்காயைச் சாப்பிடுவது நல்லதல்ல.

நீதிபதியின் மகன்களுக்கு பதவி! மோடி படுகொலைகளை மறைக்கவா?


2002ல் குஜராத் மாநிலத்திலுள்ள கோத்ரா ரயில் நிலையத்திற்கு வந்த சபர்மதி எக்ஸ்பிரஸ் எஸ்6 ரயில் பெட்டி எரிப்பையும், அதன்பிறகு நடைபெற்ற 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம் இனப்படுகொலைகளையும் விசாரிப் பதற்காக மாநில அரசால் நீதிபதி நானாவதி நியமிக்கப்பட்டார். அதேசமயம், ரயில் பெட்டி எரிப்பை மட்டும் விசாரிப்பதற்காக அன்றைய ரயில்வே துறை அமைச்சர் லல்லு பிரசாத் யாதவ், நீதிபதி பானர்ஜி தலைமையிலான கமிட்டி ஒன்றை அமைத்தார். நீதிபதி பானர்ஜி அளித்த இறுதி அறிக்கையில், எஸ்6 பெட்டி உள்ளேயிருந்துதான் எரிக்கப்பட்டுள்ளது, பெட்டியின் வெளியிலிருந்து எரிக்கப்படவில்லை என்று தெள்ளத்தெளிவாக தனது விசாரணை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இப்படியிருக்கையில், குஜராத்தில் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின் பேரில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கொடூரமான முறையில் சித்ரவதை செய்து கொல்லப்பட்டனர். முஸ்லிம் பெண்களைக் கற்பழித்தும், முஸ்லிம் கர்ப்பிணிப் பெண்களின் வயிற்றைக் கிழித்து சிசுவை தீயில் கொளுத்தியும் தாயையும் கொன்றொழித்தனர். முஸ்லிம்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டன. இன்றைய நிலை வரை பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் சொந்த வீட்டிற்கு செல்ல முடியாமல் அகதிகளாக உள்ளனர். இந்த பயங்கரவாதிகளை வெளிஉலகத்திற்கு அடையாளம் காட்டுவதற்காக டெஹல்கா பத்திரிக்கை குற்றவாளிகளிடம் அவர்களுக்குத் தெரியாமல் மறைமுகமாக கேமராவை வைத்து பேட்டி கண்டனர். குற்றவாளிகள், ‘‘நாங்கள்தான் கொலை செய்தோம்; நாங்கள்தான் முஸ்லிம்களைத் தீயிட்டுக் கொலை செய்தோம்; நாங்கள்தான் முஸ்லிம் பெண்களைக் கற்பழித்தோம்; முதலமைச்சர் நரேந்திர மோடி எங்களை ஊக்கப்படுத்தினார்; காவல்துறை எங்களுக்கு முழுமையாக ஆதரவாக இருந்தது’’ என்று வாக்குமூலம் கொடுத்ததை டெஹல்கா கேமரா பதிவு செய்தது.
இந்தப் பதிவுகளை உலகம் முழுவதும் உள்ள ஊடகங்கள் வெளியிட்ட பின்னரும் குற்றவாளிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. குஜராத் இனப்படுகொலையை விசாரிப்பதற்கான விசாரணைக் கமிஷன் தலைவர் நீதிபதி நானாவதியையே விலைக்கு வாங்கி நீதியை கேலிக் கூத்தாக்கியுள்ளார் நரேந்திர மோடி. நீதிபதி நானாவதியின் இரண்டு மகன்களுக்கு அரசு வழக்கறிஞர் பதவியை நரேந்திர மோடி வழங்கியுள்ளார். நீதிபதி நானாவதியின் மூத்த மகன் மவ்லிக் குஜராத் கூடுதல் அரசு வழக்கறிஞராக (Additonal Advocate General) நியமிக்கப்பட்டுள்ளார்.
குஜராத் முஸ்லிம் படுகொலைகளுக்கு தலைமை தாங்கிய நரேந்திர மோடிக்கு எதிரான வழக்குகளில் உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் நீதிபதி நானாவதியின் மகன் மவ்லிக் தான் (நரேந்திர மோடிக்கு ஆதரவாக) வாதாடி வருகிறார். மோடியின் பயங்கரவாத்தை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட கமிஷனின் தலைவர் நீதிபதி நானாவதியின் மகன் மவ்லிக்கே உயர்நீதிமன்றத்திலும் உச்சநீதிமன்றத்திலும் குஜராத் அரசுக்கு ஆதரவாக வாதிடுவது நீதியையே கேலிக்கூத்தாக்கும் செயலாகும். நீதிபதி நானாவதியின் இரண்டாவது மகன் தவல் அஹமதாபாத் நகராட்சி கழகத்தின் அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நானாவதியின் இரண்டு மகன்களுக்கும் இலட்சக்கணக்கான ரூபாய் மாதந்தோறும் குஜராத் அரசு வழங்குகிறது. இதுமட்டுமல்லாமல் அரசு பங்களா, கார் மற்றும் பல்வேறு மறைமுகமான சலுகைகளும் வழங்க உத்தரவிட்டுள்ளார் நரேந்திர மோடி. தனது இரண்டு மகன்களுக்கும் அரசு வழக்கறிஞர் பதவி கிடைத்ததால், “குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை தொடர்பாக குஜராத் முதல்வர் நரேந்திர மோடியிடம் விசாரணை நடத்துவதற்கு எவ்வித ஆதாரமுமில்லை” என நீதிபதி நானாவதி கூறியுள்ளார். இதன்மூலம், தனது மகன்களுக்கு அரசு வழக்கறிஞர் பதவியை லஞ்சமாகப் பெற்றுக்கொண்டு நரேந்திர மோடியைக் காப்பாற்றியுள்ளார் நானாவதி என்பது வெட்டவெளிச்சமாகியுள்ளது.
நானாவதியின் கமிஷனின் காலாவதியை குஜராத் அரசு 18வது தடவையாக 2012 மார்ச் 29ம் தேதிக்கு கால நீட்டிப்பு செய்துள்ளது. இதன் மூலம் வருகிற டிசம்பர் மாதம் குஜராத் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக இவ்வறிக்கை வெளிவராது என்பது உறுதியாகியுள்ளது. இவ்வறிக்கை மோடிக்கு ஆதரவாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனாலும், இவ்வறிக்கையைப் பற்றிய மோசடிகளை ஊடகங்கள் அக்குவேறு ஆணிவேறாக அலசினால் மோடிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்ற பயத்தின் காரணமாக நானாவதி கமிஷனுக்கு காலநீட்டிப்பு வழங்கியுள்ளார் மோடி.
நீதிபதி நானாவதியின் மகன்கள் குஜராத் அரசு வழக்கறிஞராக நியமித்ததற்கு மூத்த வழக்கறிஞர் கிரிஷ் பட்டேல் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இனப்படுகொலையில் முதல்வர் மோடியின் பங்கினைக் குறித்து நீதிபதியான தந்தை விசாரணை நடத்திவரும் வேளையில், அவரது மகன்களுக்கு மோடி தலைமையிலான குஜராத் அரசு வழக்குகளில் வாதாட பணம் கொடுப்பது வெட்கக்கேடானது என குறிப்பிட்டார். இதேபோன்று மூத்த உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஆனந்த் யாக்நிக்கும் குறிப்பிட்டுள்ளார். முஸ்லிம் இனப்படுகொலைக்கு தலைமை வகித்த நரேந்திர மோடியை பாதுகாக்கவே நானாவதி கமிஷன் செயல்படுகிறது என மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி சஞ்சீவ் பட் குற்றஞ்சாட்டினார். இக்குற்றச்சாட்டைப் பற்றி நீதிபதி நானாவதி யிடம் பத்திரிக்கையாளர்கள் கேட்டபோது, கருத்துச் சொல்ல விரும்பவில்லை என நழுவினார்.
பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு நீதிபதி நானாவதியும், அவரது மகன்களும் பதில்சொல்ல முடியாமல் ஆவேசப்பட்டுள்ளனர். தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டி லிருந்து தப்பிக்க நீதிபதிகளுக்கு லஞ்சமாகப் பதவி வழங்குவது நரேந்திர மோடிக்கு இது முதல்முறையல்ல. ஏற்கனவே பெஸ்ட் பேக்கரி வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.வி.முகீதா, ஓய்வு பெற்றவுடன், குஜராத் மின்சார வாரியத்தின் தலைவராக அவரை நியமனம் செய்தவர்தான் மோடி. இவருக்கு 50 ஆயிரம் ரூபாய் சம்பளமும், அரசு வாகனமும், பங்களாவும் வழங்கியது குஜராத் அரசு.
இந்த நீதிபதி முகீதாவுக்கு நரேந்திர மோடி, மின்சார வாரியப் பதவியை எதற்காக கொடுத்தாரென்றால், 2002ல் நடைபெற்ற கலவரத்தில் பெஸ்ட் பேக்கரி உரிமையாளர் ஹபீபுல்லாஹ் சேக் உட்பட 14 பேர் பேக்கரி அடுப்பில் தள்ளப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். இக்கொலையை செய்த பாஜக உட்பட சங்பரிவார் அமைப்பினரைச் சேர்ந்த 21 பேர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இவர்கள் அனைவரையும் விடுதலை செய்தவர்தான் நீதிபதி முகீதா என்பது குறிப்பிடத்தக்கது. இதற்காகத்தான் நரேந்திர மோடி இந்த நீதிபதிக்கு சன்மானமாக மின்சார வாரியப் பதவியை வழங்கினார்.
இவ்வளவு அநீதி நரேந்திர மோடியால் அரங்கேறிய பிறகும் உச்சநீதிமன்றம் இந்த வழக்கை எடுத்து நடத்த முன்வருவதில்லை. இனப்படுகொலை வழக்குகளை குஜராத் உயர்நீதிமன்றமே நடத்தட்டும் என்று உச்சநீதிமன்றம் சமீபத்தில் கூறியுள்ளது. குஜராத் நரேந்திர மோடிக்கு எதிராக சாட்சி சொல்லும் நபர்களுக்கு எந்தப் பாதுகாப்பும் இல்லை என தெரிந்தபிறகும் குஜராத் உயர்நீதிமன்றத்திலேயே வழக்கை நடத்தச் சொல்வது பாதிக்கப்பட் டவர்களுக்கு அநீதி இழைப்பதாக உள்ளது.
சொந்த மாநில மக்களையே படுகொலை செய்த நரேந்திர மோடியை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனைக் கொடுக்கும் நாள்தான் மனிதநேயப் போராளிகளுக்கு மகிழ்ச்சியான நாள். முஸ்லிம் இனப்படுகொலை குற்றவாளி நரேந்திர மோடியிடம் தன் மகன்களுக்கு பதவியைப் பெற்ற நீதிபதி நானாவதியின் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மனித உரிமை ஆர்வலர்களின் எண்ணமாக உள்ளது. நடவடிக்கை எடுக்குமா மத்திய அரசு?

-என்.ஏ.தைமிய்யா

ஞாயிறு, 15 ஏப்ரல், 2012

தமிழகம் முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்

சென்னை: இரண் டாம் கட்ட போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று தமிழகம் முழுவதும் நடத்தப்படுகிறது. இது குறித்த தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இரண்டாம் கட்டமாக இன்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. இதற்காக ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லு£ரி, மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்களில்  40,000 போலியோ சொட்டு மருந்து சிறப்பு  மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பயணத்தில் இருக்கும் குழந்தைகளுக்காக கூடுதலாக 1000 சிறப்பு மையங்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் விமான நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ளன.  இரவு, பகலாக மூன்று நாட்களுக்கு இம்மையங்கள்  செயல்படும்.  
தொலை து£ரம்  உள்ள கிராமங்களில் வசிக்கும் குழந்தைகளுக்கு 900,க்கும் மேற்பட்ட நடமாடும் குழுக்கள் மூலம் போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  

15ம் தேதியன்று 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட வேண்டும். தேசிய தடுப்பூசி அட்டவணைப்படி, ஓரிரு நாட்களுக்கு முன் சொட்டு மருந்து வழங்கப்பட்டிருந்தாலும் முகாம் நாட்களில் மீண்டும் சொட்டு மருந்து கொடுக்க வேண்டும். சொட்டு மருந்து வழங்கப்படுவதை உறுதி செய்வதற்கு குழந்தைகளின் விரலில் மை வைக்கப்படுகிறது. காலை 7 மணி முதல் மாலை 5 வரை மையம் செயல்படும். முகாமில் சமூக நலத்துறை, கல்வித்துறை, வருவாய் துறை , ஊரக வளர்ச்சி துறை,  நகராட்சி நிர்வாக துறை ஆகிய அரசு துறைகள் மற்றும்  அரசு சாராத்துறைகளான ரோட்டரி, இந்திய மருத்துவ கழகம், இந்திய குழந்தைகள் கழகம்.  லயன்ஸ் கிளப், ஆகியவைகளும்  ஈடுபடுகின்றன. 2 லட்சம் பணியாளர்கள் இம் முகாமில் டுபடுத்தப்பட்டுள்ளனர்.

சனி, 14 ஏப்ரல், 2012

பெட்ரோல் விலையும் அதிகரிக்கும் பட்ஜெட் நிறைவேறியதும் டீசல் விலை உயர்த்தப்படும்

புதுடெல்லி : நாடாளுமன்றத்தில் நடப்பு நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் நிறைவேறியதும் டீசல், சமையல் எரிவாயு விலையை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், டீசல், மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு ஆகியவற்றுக்கான மானிய செலவு அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்துவதற்காக, எரிபொருள் விலை விரைவில் உயர்த்தப்படும் என மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கடந்த மாதமே கூறியிருந்தார். எனினும், கூட்டணிக் கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் என்ற காரணத்தால் விலை உயர்வு ஒத்தி வைக்கப்பட்டது. 

கடந்த ஜூலை மாதத்துக்குப் பிறகு டீசல் விலை உயர்த்தப்படவில்லை. இதுபோல், பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும், அரசின் முன் அனுமதியை பெற்ற பின்பே அதன் விலையை உயர்த்த வேண்டிய நிலை இருக்கிறது. இதனால் டிசம்பர் மாதத்துக்குப் பிறகு பெட்ரோல் விலை உயர்த்தப்படவில்லை. 

இப்போதைய சர்வதேச விலை நிலவரப்படி, ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.7, டீசலுக்கு ரூ.14.36, மண்ணெண்ணெய்க்கு ரூ.31.04, சயைமல் எரிவாயு ஒரு உருளைக்கு ரூ.570 நஷ்டம் ஏற்படுகிறது. எரிபொருள் விலையை உயர்த்தாவிட்டால் பெட்ரோல் சப்ளை பாதிக்கப்படும் என்றும் எண்ணெய் நிறுவனங்கள் கடந்த மாதம் எச்சரிக்கை விடுத்திருந்தன. 

இந்நிலையில், நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட் மே முதல் வாரத்தில் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பிறகு டீசல் உள்ளிட்ட பெட்ரோலிய பொருட்களின் விலையை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக அரசு உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

டீசல் விற்பனை 12 சதவீம் அதிகரிப்பு

கடந்த 2011,12 நிதியாண்டில் பெட்ரோலிய பொருட்களின் ஒட்டுமொத்த விற்பனை வளர்ச்சி 4.9 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது கடந்த 4 ஆண்டுகளில் அதிகபட்ச வளர்ச்சி ஆகும். 4.58 சதவீதமாக இருக்கும் என அரசு மதிப்பீடு செய்திருந்தது. 2010,11 நிதியாண்டில் இது 2.9 சதவீதமாக இருந்தது. இதில் டீசல் விற்பனை 11.9 சதவீதம் என்ற இரட்டை இலக்க வளர்ச்சியை எட்டியுள்ளது. 

''பெட்ரோல் விலை அவ்வப்போது உயர்த்தப்படுகிறது. ஆனால் டீசல் விலை உயர்த்தப்படுவதில்லை. இதனால் டீசல் விற்பனை கடந்த ஆண்டில் அதிகரித்துள்ளது. டீசல் விலை கட்டுப்பாட்டை நீக்கும்வரை இதே நிலை நீடிக்கும்'' என பெட்ரோலிய பொருட்கள் திட்டம் மற்றும் ஆய்வு பிரிவு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சவூதி ஸ்பான்சரினால் 20 ஆண்டுகளாக கடும் துன்பத்திற்கு ஆளாக்கப்பட்ட சகோதரி - ரியாத் தமுமுக நடவடிக்கையால் மீட்பு


கடந்த 20 அண்டுகளுக்கு முன் சவூதி அரேபியாவிற்கு வீட்டு வேலைக்கு பணிப்பெண்ணாக வந்திருந்த தஞ்சை மாவட்டதைச் சேர்ந்த மும்தாஜ் என்ற சகோதரி தனது ஸ்பான்சரினால் கடும் துன்பத்திற்கு ஆளாக்கப்பட்டு 20 ஆண்டுகளாக தாயகம் அனுப்பாமலும் அவருக்கு ஊதியம் வழங்காமலும் அடிமையைப் போன்று வேலை வாங்கி வந்த இந்த சகோதரியைப்பற்றிய தகவல் கிடைத்தவுடன் மீட்கும் பணியில் தமுமுக தீவிர களத்தில் இறங்கியது. மத்திய மாநில அரசுகளின் கவனத்திற்கு கொண்டு சென்றதுடன் தமுமுகவுடன் Pleaceindia வும் இணைந்து இந்தியத்தூதரக அதிகாரிகளுடன் மனித உரிமை ஆணையம் ஹைல் கவர்னரேட் காவல்துறை உயர் அதிகாரிகள் போன்ற அனைத்து துறைகளையும் தொடர்பு கொண்டு எடுக்கப்பட்ட துரித நடவடிக்கையின் மூலம் அந்த சகோதரரியின் வழக்கில் தீர்வு கிடைத்துள்ளது.
70ஆயிரம் சவூதி ரியால்கள் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தனை கொடுமைகளுக்கு ஆளாக்கிய ஸ்பான்சர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்னும் சில பேப்பர் வேலைகள் பாக்கி உள்ளன. முழுமையாக முடிவடைந்தவுடன் இன்ஷா அல்லாஹ் தாயகம் அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்படும்..

ரியாத் மத்திய மண்டல தமுமுகவின் பணிகளில் இந்தப் பணி மணிமகுடமாகும்...... எல்லாப்புகழும் இறைவனுக்கே...


ஹூஸைன்கனி, ரியாத்.

வியாழன், 12 ஏப்ரல், 2012

2 லட்சம் கோடி வக்ஃபு ஊழல் - வெடிக்கும் சர்ச்சை


அறப்பணிகளுக்காகவும், மக்கள் நலப் பணிகளுக்காகவும் நம் முன்னோர்கள் தங்களது திரண்ட சொத்துக்களை மக்களுக்காக அர்ப்பணித்தனர். பொதுநலப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட சொத்துக்களின் வாயிலாக நலப் பணிகளும், அறப்பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வந்தன என்றுதான் நாம் அனைவரும் நம்பி வந்தோம். ஆனால் நல்லவர்கள் நல்ல நோக்கத்திற்காக சமர்ப்பித்த சொத்துக்களைக்கூட ஆட்டையைப் போட்ட கொள்ளையர்கள் பற்றிய சம்பவங்கள் தொடர்ந்து வெளிவந்தவண்ணம் உள்ளன.
இது இந்தியா முழுவதும் உள்ள நிலையாகும். இடையே அத்தி பூத்தாற்போல ஆற்றல்மிக்க செயல்வீரர்கள் வாரியத்தின் தலைமைப் பொறுப்புக்கு வந்து சில மோசடிகளை அம்பலப்படுத்தி வக்ஃபு சொத்துக்களை மீட்கும் சம்பவமும் நடைபெறுகிறது. ஆயினும் சுரண்டும் கும்பல் தொடர்ந்து தங்களது மோசடிகளை அரங்கேறச் செய்வது இந்தியா முழுவதும் வாடிக்கையாகி வருகிறது. நமது அண்டை மாநிலமான பாஜக ஆளும் கர்நாடகாவில் இரண்டு லட்சம் கோடி ரூபாய் அளவு வக்ஃபு வாரியத்தில் ஊழல்கள் நடைபெற்றுள்ளதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
வக்ஃபு ஊழல் விவகாரம் பற்றி உள்ளே நுழையும் முன்பு பொதுவாக வக்ஃபு வாரியம் பற்றி சில பிரமிப்பூட்டும் தகவல்களைப் பார்க்கலாம். பரந்த இந்தியாவில் அதிக அளவு நிலங்களை சொந்தம் கொண்டதாக, திரண்ட சொத்துக்களைக் கொண்ட செல்வ வளம் பொருந்தியதாக இந்திய ரயில்வேத் துறை உள்ளது. அதற்கு அடுத்தபடியாக ஏராளமான நிலங்களை தன்னகத்தே கொண்ட கொழுந்த பணக்காரத் துறையாக இந்திய ராணுவத் துறை விளங்குகிறது.
இவ்விரண்டு மெகா துறைகளுக்கும் அடுத்தபடியாக ஏராளமான பரப்பளவு கொண்டதாக நம் முன்னோர்களின் முஸ்லிம் கொடை வள்ளல்களின் நன்கொடையாம் வக்ஃபு வாரியம் விளங்குகிறது என்றால் அது மிகையல்ல. இவ்வளவு பிரம்மாண்ட சிறப்புமிக்க பின்னணி கொண்ட வக்ஃபு வாரிய சொத்துக்களில் கர்நாடக மாநிலத்தில் ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழலை விடவும், முன்னாள் இஸ்ரோ அதிகாரிகள் மாதவன் நாயர் உள்ளிட்டோர் மீது குற்றம்சாட்டப்படும் 2 லட்சம் கோடி ரூபாய் ஊழலைப் போல கர்நாடக வக்ஃபு வாரிய ஊழலும் வரலாற்றின் கறுப்பு பக்கங்களில் இடம்பெறப் போகிறது.
ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஊழல், முன்னாள் இஸ்ரோ உயர் அதிகாரிகளின் ஊழல் போன்றவை அகில இந்திய அளவில் பிரம்மாண்ட ஊழல்களாகவும், கடந்த வாரம் வெளியான 10 லட்சம் கோடி ரூபாய் நிலக்கரி வயல் ஒப்பந்த ஏல ஊழல் இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் ஊழலில் முதலிடம் பெற்றாலும், இரண்டு லட்சம் கோடி வக்ஃபு வாரிய ஊழல் ஒரு மாநில அளவில் மட்டுமே நிகழ்ந்துள்ளது.
இந்தியாவில் எத்தனை மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் உள்ளன? இவை அத்தனையிலும் உள்ள முறைகேடுகள் வெளிவந்தால் நினைக்கும் போதே மயக்கம் வருகிறது அல்லவா? இரண்டு லட்சம் கோடி வக்ஃபு நில ஊழல் குறித்து மாநில சிறுபான்மை ஆணையம் தனது அறிக்கையை முதல்வரிடம் சமர்ப்பித்தது. அதுகுறித்து விவாதிக்க அனுமதிக்க வேண்டு மென கர்நாடக சட்டப்பேரவையில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதள சட்டமன்ற உறுப்பினர்கள் பிரச்சினையை எழுப்பினர். இதுகுறித்து உடனடியாக விவாதிக்க வேண்டுமென எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தபோது, இதற்கு பதிலளித்த கர்நாடக முதலமைச்சர் சதானந்த கவுடா, இந்தப் பிரச்சனை குறித்து தமது அரசு முழுமையாக ஆய்வு செய்தபின் அதனை சபையில் விவாதத்திற்கு வைத்து அதன்பிறகு அறிக்கை வெளியிடலாம் என்று கூறிய அவர், யார் யார் வக்ஃபு சொத்துக்களை ஆக்கிரமித்தார்களோ அவர்களிடமிருந்து சட்டப்பூர்வ முறையில் திரும்பப் பெறப்படும். வக்ஃபு நிலங்களைச் சுரண்டியவர்கள் தப்பிக்க முடியாது என்று கூறினார்.
கர்நாடக வக்ஃபு ஊழலின் மதிப்பு இரண்டு மாநில பட்ஜெட்டுக்கு சமமான நிதிநிலை அளவைக் கொண்டதாக இருக்கும் என்றும், அதில் சுருட்டப்பட்ட உண்மையான பண மதிப்பு உலகத்திற்கு தெரிய வேண்டுமானால் கர்நாடகா லோக் ஆயுக்தாவின் முன்னாள் தலைவர் சந்தோஷ் ஹெக்டே தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்தால் மட்டுமே அரசியல் தலையீடு இன்றி உண்மைகள் வெளிவரும் என மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான சமீர் அஹ்மதுகான் கூறினார்.
ஊழல் பற்றிய சர்ச்சைகள் வெளிவரத் தொடங்கிய உடன் கர்நாடக மாநில சிறுபான்மை ஆணைய சேர்மன் அன்வர் மனிப்பாடி தலைமையில் ஒரு குழுவை கர்நாடக ஆளுநர் எச்.ஆர்.பரத்வாஜ் அமைத்தார். அந்தக்குழு தனது 7000 பக்கங்கள் கொண்ட அறிக்கையை முதலமைச்சர் சதானந்த கவுடா முன்னிலையில் சமர்ப்பித்தது. இந்தக்குழு 1954ஆம் ஆண்டில் இருந்து கர்நாடக மாநிலத்தில் நிகழ்ந்த வக்ஃபு நில பேர ஊழல் குறித்து விசாரணை செய்தது. 1954ல் இருந்து வக்ஃபு முறைகேடுகளை விசாரித்தால் பெரும்பாலான காங்கிரஸ் திமிங்கிலங்கள் இதில் சிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில் கர்நாடக வக்ஃபு ஊழல் தொடர்பாக சிபிஐ விசாரணை வேண்டும் என காங்கிரஸ் பெரும் தலைகள் கோரிக்கை வைத்துள்ளன.
கர்நாடக மாநிலத்தை இதுவரை சுரண்டிய ஸாரி, ஆண்ட கட்சிகளில் காங்கிரஸை அடுத்து தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த புண்ணியவான்கள் முக்கிய இடம் பிடிக்கின்றனர். சிபிஐ காங்கிரஸின் கதர்சட்டை அணிந்து சோனியா காந்திக்கு ஜே என கோஷம் போட்டு செயல்பட்டு வருவதாக பல ஆண்டுகளாக சர்ச்சைகள் வெளிவந்த நிலையில் மதச்சார்பற்ற ஜனதா தளத்தினர் கோரிக்கையின்படி சந்தோஷ் ஹெக்டே தலைமையில் விசாரணைக் கமிஷன் அமைத்தால் நீதி நிலைநாட்டப்படும் என ஓரளவு நாம் நம்பலாம்.
45 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் கறைபடியா(?) கரத்துக்குச் சொந்தக்காரரான திருவாளர் எடியூரப்பாவை வீட்டிற்கும், சிறைக்கும் அனுப்பிய சந்தோஷ் ஹெக்டேவின் தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்தால்தான் உண்மை வெளியாகும் என உறுதிபட கருத்துக்கள் பரவத் தொடங்கியுள்ள நிலையில் கர்நாடக பாஜக அரசு அமைத்துள்ள மாநில சிறுபான்மை ஆணையத் தலைவர் அன்வர் மனிப்பாடி கமிட்டி அறிக்கையினை நாம் பார்த்தோமேயானால் 54 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் கர்நாடக வக்ஃபு வாரியத்திற்குச் சொந்தமானவை என பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அதில் 22 ஆயிரம் ஏக்கரில் இருந்து 25 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் வரை சட்டவிரோத ஆக்கிரமிப்பில் உள்ளதால் அன்வர் மனிப்பாடி கமிட்டி கூறுகிறது. அதிலும் குறிப்பாக சட்டவிரோத ஆக்கிரமிப்புக்கு உள்ளான நிலங்களில் நிதி மதிப்பில் 85 சதவீதம் உலகில் மிக வேகமாக வளர்ந்துவரும் மாநகரமான பெங்களூருவில் நில ஆக்கிரமிப்புக்கு இலக்காகி உள்ளதாம்.
கர்நாடக வக்ஃபு வாரியத்தின¢ நிலங்களின் மொத்த மதிப்பு 4 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் 2 லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நிலங்கள் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியுள்ளன. இதில் மிக அதிக அளவு முறைகேடுகள் 2001ஆம் ஆண்டில் இருந்து 2012ஆம் ஆண்டு வரை நிகழ்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது. ஏராளமான வக்ஃபு நிலங்கள் இந்த காலக்கட்டங்களில் சந்தடியின்றி தனியார்களுக்கு பெயர் மாற்றம் செய்யப்பட்டன. முறையான விசாரணை செய்து நடவடிக்கைகளை கடுமையாக்கினால் அனைத்தும் வெளிவரும் என அன்வர் மனிப்பாடி கமிட்டி அறிக்கை கூறுகிறது. ஏராளமான அரசியல்வாதிகளும், இடைத்தர கர்களும், ரியல் எஸ்டேட் தாதாக்களும் இதன் பின்னணியில் உள்ளதாக அன்வர் கூறுகிறார். மெகா ஊழலில் 38 பேர் குற்றவாளிகளின் பெயர்களைக் குறிப்பிட மறுத்துவிட்ட அன்வர் மனிப்பாடி, காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளைச் சேர்ந்த 38 பேர் இந்த மெகா ஊழலில் தொடர்புடையவர்கள் என தெரிவித்திருக்கிறது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அகில இந்திய தலைவர்கள், ராஜ்யசபா உறுப்பினர்கள், வக்ஃபு வாரிய முன்னாள் இன்னாள் உறுப்பினர்கள், உயர் அதிகாரிகள் ஆகியோர் இதில் இடம்பெற்றுள்ளதாக அன்வர் கமிட்டி அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
அதிகாரப்பூர்வமற்ற முறையில் செய்திகள் வெளியே கசிந்து பழம்பெருச்சாளி அரசியல் வாதிகளின் முகத்திரையைக் கிழிக்கத் தொடங்கியுள்ளது. அதன்படி 38 முக்கிய அரசியல் புள்ளிகளின் பெயர்கள் வெளிவந்துள்ளன. காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களான ரோஷன் பெய்க், என்.ஏ.ஹாரிஸ், தன்வீர் சேத், கமருல் இஸ்லாம் ஆகியோரும், மதச்சார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் சமீர் அஹ்மத்கான், முன்னாள் மத்திய அமைச்சர் சி.எம்.இப்ராஹிம், கர்நாடக முன்னாள் வக்ஃபு வாரிய அமைச்சர் ஹிந்தா ஷேஹ்ரி, முன்னாள் அமைச்சர் இக்பால் அன்சாரி ஆகியோரின் பெயரும் இடம்பெற்றுள்ளது.
திசை திருப்பும் முயற்சியா? கர்நாடகாவில் பாஜக ஆட்சி அமைத்ததில் இருந்தே முதல் அமைச்சர் எடியூரப்பா தலைமையிலான அரசின் மீது ஏராளமான ஊழல் புகார்கள் கூறப்பட்டு அந்தப் புகார்களின் மீது நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுவரும் நிலையில் பிரச்சனைகளை திசைதிருப்புவதற்காக மதவாத பாஜக அரசு இதன் பின்னணியில் சதி செய்வதற்காக தனது அரசின் சிறுபான்மை நலத்துறையை ஏன் பயன்படுத்தி இருக்கக்கூடாது? முஸ்லிம்களையும், எதிர்க்கட்சிகளான காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளத்தையும் களங்கப்படுத்தச் செய்யும் முயற்சியாகக்கூட இது இருக்கலாம் அல்லவா? என்ற வாதம் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள அரசியல்வாதிகளால் எழுப்பப்படுகிறது. அவர்களது வாதங்கள் புறக்கணிக்கக்கூடிய ஒன்றல்ல, எனினும் வக்ஃபு சொத்துக்களில் கணிசமானவை நாடு முழுவதும் ஆக்கிரமிப்பு சக்திகளால் கபளீகரம் செய்யப்படுவது மறுக்க முடியாத உண்மை அல்லவா?
இரண்டையுமே தெளிவுபடுத்த தேவை முறையான, விரைவான, நீதியான விசாரணை.

புனித ஹஜ் பயணத்திற்கான விண்ணப்ப தேதி ஏப்ரல் 25 வரை


புனித ஹஜ் பயணத்திற்கான விண்ணப்ப தேதி ஏப்ரல் 25 வரை நீட்டிப்புபிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்தால் சவூதி செல்ல ஒரு வருட பாஸ்போர்ட் வாய்ப்பை பயன்படுத்த எம்.அப்துல் ரஹ்மான் எம்.பி. வேண்டுகோள்
இந்த ஆண்டு புனித ஹஜ் பயணம் செல்வதற்கு ஏப்ரல் 16-ம் தேதி கடைசி என்று அறிவிக் கப்பட்டிருந்தது.அது வரும் 25-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டி ருப்பதாக மத்திய ஹஜ் குழு அறிவித்துள்ளது. இந்த ஆண்டு புனித ஹஜ்ஜுக்கு செல்ல நாடியிருந்து இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி விண் ணப்பிக்கலாம்.
ஹஜ் செல்ல ஒரு வருட பாஸ்போர்ட்
புனித ஹஜ் பயணத்திற்கு விண்ணப்பிக்கும் போது அவர் கள் சர்வதேச பாஸ்போர்ட் வைத் திருக்க வேண்டும் என்பது நிபந்தனையாக விதிக்கப்பட் டுள்ளது பாஸ்போர்ட் இல்லாமல் ஹஜ் பயணத்திற்கு விண்ணப் பித்தவர்கள் சர்வதேச பாஸ் போர்ட் விரைவாக பெறுவதற் காக பல்வேறு இடங்களில் பாஸ்போர்ட் மேளாக்கள் நடை பெற்றன.
ஆனாலும், காவல்துறை விசாரணையில் தாமதம் ஏற்பட்டதால் பாஸ்போர்ட் பெறுவதில் ஹஜ் பயணி களுக்கு பெரும் சிரமம் ஏற்பட் டது. எம். அப்துல் ரஹ்மான் எம்.பி. கோரிக்கை
இதுபற்றி கடந்த மார்ச் 26-ம் தேதி நாடாளுமன்ற மக்கள வையில் எம். அப்துல்ரஹ்மான் எம்.பி., அரசின் கவனத்துக்கு கொண்டு வந்து பேசினார். தொடர்ந்து மத்திய அரசின் வெளிவிவகாரத்துறை கூடுதல் செயலாளரை சந்தித்து முறையிட்டார்.
இதன் பலனாக போலீஸ் விசாரணையில்தாமதம் ஏற்பட் டால் சவூதிக்கு செல்லும் வகையில் எட்டு மாத கால அவகாசம் கொண்ட பாஸ் போர்ட் வழங்கப்படும் என்று வெளியுறவுத்துறை அறிவித் தது.
இப்போது அந்த அறிவிப் பிலும் ஒரு மாற்றம் செய்து வெளியுறவுத்துறை புதிய அறிவிப்பை வெளியிட் டுள்ளது.
இதன்படி, புனித ஹஜ் பயணம் செல்வதற்கு பாஸ் போர்ட் விண்ணப்பிப்பவர்கள் ஹஜ் பயணத்திற்கு விண் ணப்பித்ததற்கான கவர் எண்ணை எழுதத் தேவை யில்லை என்றும், 10 ரூபாய் ஸ்டாம்ப் பேப்பரில் நோட்ரிக் பப்ளிக்கிடம் `அபிடவிட்� (பிரமாண வாக்குமூலம்) அளித்தால் அவர்களுக்கு ஒரு வருட காலம் செல்லுபடியாகும் பாஸ்போர்ட் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட் டுள்ளது.
காவல் துறையின் விசாரணை முடிந்து அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருந்தால் அவர்களுக்கு 20 வருட சர்வதேச பாஸ்போர்ட் வழங்கப் படும். இந்த ஆண்டு ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள இருப் பவர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்த காயிதெ மில்லத் பேரவை சர்வதேச ஒருங்கி ணைப்பாளர் எம். அப்துல் ரஹ்மான் எம்.பி. வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புதன், 11 ஏப்ரல், 2012

இந்தோனேஷியாவில் பயங்கர நிலநடுக்கம் – சென்னை உட்பட தமிழகத்தின் பல இடங்களில் நில அதிர்வு – சுனாமி எச்சரிக்கையால் மக்கள் பீதி!


சென்னை:இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கம் சென்னை உட்பட தமிழகத்தின் பல பகுதிகளில் தாக்கத்தை ஏற்படுத்தியதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் இன்று மதியம் சுமார் 2.15 மணியளவில் இந்த  நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 8.9 ஆக பதிவானதால் நிலநடுக்கம் மிகக் கடுமையாக உணரப்பட்டது.
இதன் காரணமாக சென்னை,காஞ்சிபுரம்,திருவள்ளூர்,உதகை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டது. சென்னையில் அண்ணாசாலை,மந்தைவெளி, மைலாப்பூர், எழும்பூர், ஆழ்வார்ப்பேட்டை போன்ற பகுதிகளிலும் நில நடுக்கம் உணரப்பட்டது. இதனால் மக்கள் பீதியடைந்து  வீடுகளை விட்டு வெளியேறினர்.
காஞ்சிபுரம் மாவட்டத்திலும் லேசான நில அதிர்வு உணரப்பட்டது. கட்டடங்கள், வீடுகளில் இருந்த சேர்கள், டேபிள்கள் குலுங்கின. இதனால் மக்கள் பீதியில் வீடுகளை விட்டு  வெளியேறினர்.
கட்டிடங்கள் குலுங்கியதால் வீடு மற்றும் அலுவலகங்களில் இருந்தோர் பீதியடைந்து  வெளியே ஓடிவந்தனர். அதேப்போன்று ஊட்டியிலும் நில அதிர்வு உணரப்பட்டது.இதனிடையே தமிழகம் தவிர்த்து இந்தியாவில் புவனேஸ்வர், கொல்கத்தா,டெல்லி மற்றும்  அந்தமான் நிக்கோபார் தீவுகள் உள்ளிட்ட இடங்களிலும் இந்த நிலநடுக்கம்  உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே நிலநடுக்கம் ஏற்பட்ட இந்தோனேஷியா, இந்தியா, இலங்கை, மலேசியா  உள்ளிட்ட 28 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அந்தமான்   தீவுகளில் சுனாமி தாக்கலாம் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சுமத்ரா தீவில் ஏற்பட்ட நில நடுக்கம் காரணமாக தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் அந்தமான் தீவுகளில் உள்ள கடற்கரை பகுதிகளில் உஷார் நிலையில் இருக்கும் படி எச்சரிக்கப்பட்டுள்ளது.

போலீஸ் காவலில் கொல்லப்பட்ட முஸ்லிம் இளைஞரின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு!


மும்பை:குண்டுவெடிப்பு வழக்கில் அநியாயமாக தீவிரவாத பட்டம் சூட்டி கைது செய்யப்பட்டு பின்னர் போலீஸ் காவலில் கொல்லப்பட்ட காஜா முஹம்மது யூனுஸின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
2002 ஆம் ஆண்டு டிசம்பர் 6-ஆம் தேதி மஹராஷ்ட்ரா மாநிலம் பர்பானி மாவட்டத்தில் காலியான பேருந்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் பங்கிருப்பதாக குற்றம்சாட்டி 2003 ஜனவரி மாதம் கறுப்புச் சட்டமான பொடாவில் அநியாயமாக யூனுஸ் கைது செய்யப்பட்டார்.
25 வயதான யூனுஸ் துபாயில் சாஃப்ட்வெயர் எஞ்சீனியராக பணியாற்றி வந்தவர் ஆவார்.பேருந்து குண்டுவெடிப்பில் கைது செய்யப்பட்ட யூனுஸ் போலீஸ் காவலில் வைத்து போலீஸாரின் வெறித்தனமான சித்திரவதைக்கு பலியானார். இதனைத் தொடர்ந்து அவரது தாயார் ஆசியா பேகம் சம்பந்தப்பட்ட போலீஸ்காரர்கள் மீது வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 14 போலீஸ்காரர்களில் 10 பேரை விடுதலைச் செய்துள்ளது.
ரூ.20 லட்சம் இழப்பீட்டு தொகையை குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட போலீஸ்காரர்களின் சம்பளத்தில் இருந்து பிடித்து 2 மாதத்தில் அளிக்குமாறு நீதிமன்றம் கூறியது.
குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ள போலீஸ்காரர்களில் ஒருவரான சச்சின் வாஸே துணை போலீஸ் ஆய்வாளர் ஆவார். என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டாக கருதப்படும் இவர் பின்னர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவர் ஹிந்துத்துவா தீவிரவாத இயக்கமான பால்தாக்கரே தலைமையிலான சிவசேனாவில் அங்கமானார்.
இவ்வழக்கில் இழப்பீடு வழங்கப்பட்டது குறித்து காஜா முஹம்மது யூனுஸின் மூத்த சகோதரர் காஜா ஹுஸைன் கூறியது:
14 போலீஸ்காரர்கள் குற்றவாளிகள் என்று சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி கண்டறிந்தனர். நீதிமன்றம் இழப்பீடாக அறிவித்துள்ள ரூ.20 லட்சம் தொகை காஜா யூனுஸின் உயிரை திரும்ப தராது. நீதி நடைமுறைப்படுத்த வேண்டுமானால் குற்றவாளிகள் தூக்கிலிடப்பட வேண்டும். இந்த வழக்கின் முக்கிய சாட்சியான டாக்டர்.அப்துல் மத்தீன், 14 போலீஸ் அதிகாரிகளும் காஜா யூனுஸை சித்திரவதைச் செய்து கொலைச் செய்ததை பார்த்ததாக குறிப்பிட்டுள்ளார்.
இதனை சி.ஐ.டி போலீசார் 2006 ஆம் ஆண்டு அளித்த பிரமாணப் பத்திரத்திலும் குறிப்பிட்டுள்ளனர். ஆனால், குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுதலைச் செய்யப்பட்டனர். நான் எனது வழக்கறிஞர் மிஹிர் தேசாயுடன் கலாந்தாலோசித்துவிட்டு இவ்வழக்கு தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடுச் செய்வேன் என்றார்.
காஜா யூனுஸிற்கு நீதி கிடைப்பதற்காக சட்டரீதியாக போராடி வந்த அவரது தந்தை மரணமடைந்துவிட்டார்.