AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

புதன், 21 செப்டம்பர், 2011

ஜெர்மனியில் டிரைவர் இல்லாமல் ஓடும் கார்


கம்ப்யூட்டர் மூலம் வடிவமைக்கப்பட்ட ஆளில்லா விமானங்கள் பறந்து சென்று குறிப்பிட்ட இலக்கை ஏவுகணை வீசி தாக்கி விட்டு மீண்டும் திரும்புகின்றன. அதே போன்று டிரைவர் இல்லாமல் “ரிமோட் கண்ட்ரோல்” மூலம் இயங்கும் கார்களை தயாரிப்பதில் ஜெர்மனி விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ரூ. 25 கோடி செலவில் கடந்த 4 ஆண்டுகளாக இந்த கார்களை தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.
 
இதில் பல்வேறு குழுக்கள் தீவிரமாக பணியாற்றி வருகிறது. இந்த நிலையில் போக்குவரத்து சிக்னல்களை கண் காணித்து இயங்கும் வகையில் கம்ப்யூட்டர் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும் காரின் முன் பகுதியில் காமிரா மற்றும் லேசர் ஸ்கேனிங் கருவிகள் போன்றவை பொருத்தப்பட்டுள்ளன.
 
சோதனை ஓட்டத்தின் மூலம் இந்த காரின் செயல்பாடு பெர்லின் நகர வீதியில் நடத்தப்பட்டது. எதிர் காலத்தில் இக்கார் வீதிகளில் உலாவரும் என பெர்லின் பல்கலைக்கழக ஆராய்ச்சி குழு தலைவர் ராவுல் ரொஜாஸ் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக