புதுடெல்லி: தகுதியுள்ள மாணவிக்கு எல்.எல்.பி. படிப்புக்கான சீட் வழ ங்க டெல்லி பல்கலை கழகத்துக்கு, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லி பல்கலை கழகத்தில் வழக்கறிஞர்களுக்கான எல்.எல்.பி. படிப்பு, 2011-2014ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான தேர்வு கடந்த ஜூலை 13ம் தேதி நடந்தது. இந்த தேர்வில், சல்மா கான் என்ற மாணவியும் பங்கு பெற்றார். ஓ.பி.சி. பிரிவினருக்கான 27 சதவீதம் ஒதுக்கீட்டின் கீழ் , இந்த படிப்புக்கான 50 சீட் ஒதுக்கப்பட்டது. ஆனால், தேர்வில் 444வது இடம் பிடித்த சல்மாவுக்கு பல்கலை நிர்வாகம் சீட் கொடுக்கவில்லை.
மேலும் எல்.எல்.பி. படிப்புக்கு இவருக்கு முன் சேர்க்கப்பட்டவர் 1017ம் இடத்தையே பிடித்துள்ளார். இதையறிந்த சல்மா, ஓ.பி.சி. பிரிவான தகுதிவாய்ந்த தனக்கு எல்.எல்.பி. படிப்புக்கான சேர்க்கை கொடுக்கவேண்டும் என்று, உயர்நீதிமன்றத்தில், வழக்கு தொடர்ந்தார்.
நீதிமன்றத்தில் சல்மாவின் சார்பில் வழக்கறிஞர்கள் ஆர்.கே. செய்னி, சிடாப் அலி சவுத்திரி ஆகியோர் ஆஜராயினர். அவர்கள் உயர்நீதிமன்றத்தில் சமர்பித்த மனுவில் கூறியுள்ளதாவது:
டெல்லி பல்கலைக்கழகத்தில் எல்.எல்.பி. படிப்புக்கான, 2011-2014ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க் கையில், 50 இடங்கள் இருந்தும், தகுதிவாய்ந்த சல்மாவுக்கு சீட் வழங்கவில்லை. மேலும் பல்கலை நடத்திய தேர்வில் சல்மா எடுத்துள்ள 444வது இடத்துக்கும், தற்போது சேர்க்கப்பட்டுள்ள 1017ம் இடத்துக்கும் ஒப்பிட்டுப்பார்த்தால், தகுதியுள்ளவருக்கு சீட் கொடுக்காமல் பல்கலை அலைகழித்துள்ளது. இதுபோன்ற செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது. எனவே, சல்மாவுக்கு எல்.எல்.பி. சீட் வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தனர்.
இந்த மனுமீதான விசாரணை, நேற்று முன்தினம் நீதிபதி கைலாலு கம்பீர் முன் வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி தீர்ப்பில் கூறியதாவது:
தகுதி வாய்ந்த மாணவி சல்மாவுக்கு, டெல்லி பல்கலைக்கழகம் எல்.எல்.பி. சீட் வழங்காதது குறித்து வரும் 30ம் தேதிக்குள் விளக்கமளிக்க வேண்டும். மேலும் சல்மாவுக்கு, டெல்லி பல்கலை எல்.எல்.பி. படிப்புக்கான 3 வருடமும் சீட் வழங்க வேண்டும். இவ்வாறு நீதிபதி தீர்ப்பில் கூறினார்.
டெல்லி பல்கலை கழகத்தில் வழக்கறிஞர்களுக்கான எல்.எல்.பி. படிப்பு, 2011-2014ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான தேர்வு கடந்த ஜூலை 13ம் தேதி நடந்தது. இந்த தேர்வில், சல்மா கான் என்ற மாணவியும் பங்கு பெற்றார். ஓ.பி.சி. பிரிவினருக்கான 27 சதவீதம் ஒதுக்கீட்டின் கீழ் , இந்த படிப்புக்கான 50 சீட் ஒதுக்கப்பட்டது. ஆனால், தேர்வில் 444வது இடம் பிடித்த சல்மாவுக்கு பல்கலை நிர்வாகம் சீட் கொடுக்கவில்லை.
மேலும் எல்.எல்.பி. படிப்புக்கு இவருக்கு முன் சேர்க்கப்பட்டவர் 1017ம் இடத்தையே பிடித்துள்ளார். இதையறிந்த சல்மா, ஓ.பி.சி. பிரிவான தகுதிவாய்ந்த தனக்கு எல்.எல்.பி. படிப்புக்கான சேர்க்கை கொடுக்கவேண்டும் என்று, உயர்நீதிமன்றத்தில், வழக்கு தொடர்ந்தார்.
நீதிமன்றத்தில் சல்மாவின் சார்பில் வழக்கறிஞர்கள் ஆர்.கே. செய்னி, சிடாப் அலி சவுத்திரி ஆகியோர் ஆஜராயினர். அவர்கள் உயர்நீதிமன்றத்தில் சமர்பித்த மனுவில் கூறியுள்ளதாவது:
டெல்லி பல்கலைக்கழகத்தில் எல்.எல்.பி. படிப்புக்கான, 2011-2014ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க் கையில், 50 இடங்கள் இருந்தும், தகுதிவாய்ந்த சல்மாவுக்கு சீட் வழங்கவில்லை. மேலும் பல்கலை நடத்திய தேர்வில் சல்மா எடுத்துள்ள 444வது இடத்துக்கும், தற்போது சேர்க்கப்பட்டுள்ள 1017ம் இடத்துக்கும் ஒப்பிட்டுப்பார்த்தால், தகுதியுள்ளவருக்கு சீட் கொடுக்காமல் பல்கலை அலைகழித்துள்ளது. இதுபோன்ற செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது. எனவே, சல்மாவுக்கு எல்.எல்.பி. சீட் வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தனர்.
இந்த மனுமீதான விசாரணை, நேற்று முன்தினம் நீதிபதி கைலாலு கம்பீர் முன் வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி தீர்ப்பில் கூறியதாவது:
தகுதி வாய்ந்த மாணவி சல்மாவுக்கு, டெல்லி பல்கலைக்கழகம் எல்.எல்.பி. சீட் வழங்காதது குறித்து வரும் 30ம் தேதிக்குள் விளக்கமளிக்க வேண்டும். மேலும் சல்மாவுக்கு, டெல்லி பல்கலை எல்.எல்.பி. படிப்புக்கான 3 வருடமும் சீட் வழங்க வேண்டும். இவ்வாறு நீதிபதி தீர்ப்பில் கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக