பஸ்சில் பயணம் செய்த 29 யாத்திரிகர்களை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர். பாகிஸ்தானில் உள்ள தென்மேற்கு பலுசிஸ்தானை சேர்ந்த ஷியா பிரிவினர் ஈரான் தப்பானில் உள்ள புனித தலத்துக்கு யாத்திரிகர்களாக சென்று உள்ளனர். அவர்களில் 45 பேர் ஒரு பஸ்சில் பாகிஸ்தானுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
அந்த பஸ் குவெட்டா அருகே 50 கி.மீட்டர் தூரத்தில் உள்ள மஸ்டங் மாவட்டத்தில் வந்து கொண்டிருந்தது. அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் ராக்கெட் லாஞ்சரை ஏவி பஸ்சை தடுத்து நிறுத்தினர். பின்னர் 10 பேர் ஏ.கே. 47 ரக துப்பாக்கியுடன் பஸ்சுக்குள் ஏறினர். அதில் இருந்த யாத்திரிகர்களை கீழே இறக்கி வரிசையாக நிற்க வைத்து சரமாரியாக சுட்டனர். அதில் 26 பேர் அதே இடத்தில் பலியானார்கள்.
காயம் அடைந்தவர்களை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர்களில் 3 பேர் வழியிலேயே இறந்தனர். இச்சம்பவம் ஷியா பிரிவினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஷியா பிரிவு யாத்திரிகள் சுட்டுக்கொல்லப்பட்டது. இது 2-வது சம்பவமாகும். ஏற்கனவே நடந்த சம்வத்தில் 30 பேர் கொல்லப்பட்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக